என் மலர்
செய்திகள்

விருத்தாசலத்தில் பாம்பு கடித்து மாணவன் மரணம்
விளையாடிக்கொண்டிருந்த போது மாணவனை புதருக்குள் இருந்த பாம்பு கடித்ததில் பரிதாபமாக உயிரிழந்தான்.
விருத்தாசலம்:
விருத்தாசலம் காந்திநகரைச் சேர்ந்தவர் ஆனந்த் மகன் ஹரிஹரன் (வயது 11). இவர் அதேப்பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து கொண்டிருந்தான். இந்நிலையில் தற்போது கோடை விடுமுறை என்பதால் தன்னடைய நண்பர்களுடன் அதேப்பகுதியில் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்தான்.
அப்போது பந்து புதருக்குள் ஓடி விழுந்தது. ஹரிஹரன் சென்று பந்தை எடுத்தப்போது புதருக்குள் இருந்த பாம்பு கடித்துள்ளது. உடனே அவரை விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தும் சிகிச்சைப் பலனின்றி இறந்தார்.
புகாரின் பேரில் விருத்தாசலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






