search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொடுங்கையூரில் லாரி தீப்பிடித்து எரிந்தது
    X

    கொடுங்கையூரில் லாரி தீப்பிடித்து எரிந்தது

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    கொடுங்கையூரில் லாரி தீப்பிடித்து எரிந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெரம்பூர்:

    கொடுங்கையூர், தண்டையார்பேட்டை சாலையில் உள்ள குப்பை கிடங்கு அருகே தனியாருக்கு சொந்தமான லாரிகள் நிறுத்தும் இடம் உள்ளது. அங்கு 10-க்கும் மேற்பட்ட லாரிகள் நிறுத்தப்பட்டு இருந்தது.

    இன்று காலை திடீரென ஒரு லாரியில் தீப்பிடித்தது. சிறிது நேரத்தில் தீ மளமளவென பற்றி எரிந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் கொருக்குப்பேட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். எனினும் லாரி முழுவதும் எரிந்து நாசமானது.

    லாரியில் தீப்பிடித்தவுடன் அருகில் நிறுத்தப்பட்டிருந்த மற்ற லாரிகளை வேறு இடத்திற்கு கொண்டு சென்றுவிட்டனர். இதனால் பெரிய தீ விபத்து தவிர்க்கப்பட்டது.

    தீ விபத்திற்கான என்ன என்று தெரியவில்லை. மர்ம நபர்கள் யாரேனும் லாரிக்குள் தீ வைத்தனரா என்பது குறித்து கொடுங்கையூர் இன்ஸ்பெக்டர் ஈஸ்வரன் விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×