என் மலர்tooltip icon

    செய்திகள்

    செந்துறையில் கிணற்றில் மூழ்கி மாணவன் பலி
    X

    செந்துறையில் கிணற்றில் மூழ்கி மாணவன் பலி

    செந்துறையில் கிணற்றில் குளித்த மாணவர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தான். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    செந்துறை:

    செந்துறை ராமசாமி தெருவை சேர்ந்தவர் குமரன். இவரது மனைவி குமரவள்ளி. இவர்களுக்கு தர்மதுரை(வயது19), பிரபு(16), சக்தி (14) ஆகிய 3 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் நேற்று மாலை தர்மதுரை, பிரபு இருவரும் நக்கம்பாடியில் உள்ள தனியார் தோட்ட கிணற்றுக்கு குளிக்க சென்றனர்.

    அங்கு இருவரும் குளிக்கும் போது படியில் அமர்ந்து குளித்த பிரபு தவறி கிணற்றுக்குள் விழுந்தார். இதையடுத்து தர்மதுரை பிரபுவை காப்பாற்ற முயன்றார். ஆனால் முடியவில்லை. இதனால் பிரபு தண்ணீரில் மூழ்கி இறந்தார்.இது குறித்த தகவல் அறிந்ததும் செந்துறை தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிரபுவின் உடலை மீட்டனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இந்த சம்பவம் குறித்து செந்துறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கிணற்றில் மூழ்கி பலியான பிரபு தற்போது 10-ம்வகுப்பு தேர்வு எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×