என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேவகோட்டை அருகே மாட்டுவண்டி- ரேக்ளா பந்தயம்
    X

    தேவகோட்டை அருகே மாட்டுவண்டி- ரேக்ளா பந்தயம்

    தேவகோட்டை அருகே மாட்டுவண்டி மற்றும் குதிரை வண்டி பந்தயம் நடைபெற்றது.

    தேவகோட்டை:

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே சிறுமருதூர், தாணிச்சாவூரணி நாட்டாளம்மன் கோவில் மதுஎடுப்பு விழாவை முன்னிட்டு மாட்டுவண்டி மற்றும் குதிரை வண்டி பந்தயம் நடைபெற்றது. மதுரை, திருச்சி புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், மாவட்டங்களை சேர்ந்த 7 குதிரைவண்டிகளும், பெரியமாடு 9 வண்டிகளும் சின்னமாடு 14 வண்டிகளும் கலந்து கொண்டன.

    பந்தய வண்டிகள் கண்ட தேவி ஊரணியை சுற்றி வந்தன. குதிரை வண்டி ஊரணியை 10 சுற்றுகளும், பெரியமாடு 8 சுற்றுகளும், சின்னமாடு 6 சுற்றுகளும் வந்தன.

    குதிரை வண்டியில் முதல் பரிசு ரூ. 9 ஆயிரத்தை தாணிச்சாவூரணி பெரிய ரஞ்சன், 2-ம் பரிசு ரூ. 8 ஆயிரத்தை உஞ்சனை சொர்ணலிங்கம், மூன்றாம் பரிசு ரூ. 7 ஆயிரத்தை சிறுமருதூர் ராஜ்குமார் ஆகியோர் பெற்றனர்.

    பெரிய மாட்டுவண்டியில் முதல்பரிசு ரூ. 21 ஆயிரத்தை விராமதி சந்திரன், 2-ம் பரிசு ரூ. 17 ஆயிரத்தை பல்ல வராயன்பட்டி இளமாறன், 3-ம் பரிசு ரூ. 15 ஆயிரத்தை கீழவளவு சக்திஅம்பலம், 4-ம் பரிசு ரூ. 4 ஆயிரத்தை வெட்டி வயல் சுந்தரேசன் பெற்றனர்.

    சின்னமாடு முதல் பரிசு ரூ. 15 ஆயிரத்தை தேவகோட்டை மாணிக்கம் செட்டியார், இரண்டாம் பரிசு ரூ. 12 ஆயிரமும் வெட்டிவயல்சுந்தரேசன், மூன்றாம் பரிசு ரூ. 9 ஆயிரத்தை சிங்கதிருமுகப்பட்டி செல்லத்துரை, நான்காம் பரிசு ரூ. 3 ஆயிரத்தை வெளிமுத்தி வாஹினி பெற்றார்கள். வெற்றி பெற்ற குதிரை மற்றும் மாடுகளுக்கு மரியாதை செய்து மாலை, வேட்டிகள் மற்றும் ரொக்க பரிசுகளும் வழங்கப்பட்டன.

    Next Story
    ×