என் மலர்
செய்திகள்

விருத்தாசலம் அருகே போலி டாக்டர் கைது
விருத்தாசலம் அருகே சித்த மருத்துவம் படித்து விட்டு நோயாளிகளுக்கு ஆங்கில மருத்துவ சிகிச்சை அளித்த வந்த போலி டாக்டரை கைது செய்து மருந்தகத்திற்கு ‘சீல்’ வைத்தனர்.
ஸ்ரீமுஷ்ணம்:
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள கார்மாங்குடியைச் சேர்ந்தவர் ஜெகஜீவன்ராம் (வயது 42). இவர் சித்த மருத்துவம் படித்து விட்டு கருவேப்பிலங்குறிச்சியில் மருந்தகத்தில் ஆங்கில மருத்துவ சிகிச்சை அளித்து வருவதாகவும், நோயாளிகள் பாதிக்கப்படுவதாகவும் கடலூர் மாவட்ட மருத்துவ பணிகள் இணை இயக்குனருக்கு தகவல் வந்தது.
இதையடுத்து அவரது உத்தரவின்படி விருத்தாசலம் தலைமை மருத்துவ அலுவலர் சாமிநாதன் தலைமையிலான டாக்டர்கள் அடங்கிய குழுவினர் கருவேப்பிலங்குறிச்சியில் உள்ள அந்த மருந்தகத்தில் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது ஜெகஜீவன்ராம் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துக்கொண்டிருந்தார். அவரிடம் மருத்துவ குழுவினர் விசாரணை நடத்தினர். அதில் அவர் போலி டாக்டர் என்று தெரிய வந்தது.
இதையடுத்து மருத்துவக்குழுவினர் அங்கிருந்த மருந்துகள், ஊசி, மருத்துவ பரிசோதனை கருவிகளை பறிமுதல் செய்தனர். மேலும் அந்த மருந்தகத்திற்கு ‘சீல்’ வைத்தனர்.
இதனை தொடர்ந்து ஜெகஜீவன்ராம் கருவேப்பிலங்குறிச்சி போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார். இது குறித்த புகாரின் பேரில் கருவேப்பிலங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெக ஜீவன்ராமை கைது செய்தனர்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள கார்மாங்குடியைச் சேர்ந்தவர் ஜெகஜீவன்ராம் (வயது 42). இவர் சித்த மருத்துவம் படித்து விட்டு கருவேப்பிலங்குறிச்சியில் மருந்தகத்தில் ஆங்கில மருத்துவ சிகிச்சை அளித்து வருவதாகவும், நோயாளிகள் பாதிக்கப்படுவதாகவும் கடலூர் மாவட்ட மருத்துவ பணிகள் இணை இயக்குனருக்கு தகவல் வந்தது.
இதையடுத்து அவரது உத்தரவின்படி விருத்தாசலம் தலைமை மருத்துவ அலுவலர் சாமிநாதன் தலைமையிலான டாக்டர்கள் அடங்கிய குழுவினர் கருவேப்பிலங்குறிச்சியில் உள்ள அந்த மருந்தகத்தில் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது ஜெகஜீவன்ராம் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துக்கொண்டிருந்தார். அவரிடம் மருத்துவ குழுவினர் விசாரணை நடத்தினர். அதில் அவர் போலி டாக்டர் என்று தெரிய வந்தது.
இதையடுத்து மருத்துவக்குழுவினர் அங்கிருந்த மருந்துகள், ஊசி, மருத்துவ பரிசோதனை கருவிகளை பறிமுதல் செய்தனர். மேலும் அந்த மருந்தகத்திற்கு ‘சீல்’ வைத்தனர்.
இதனை தொடர்ந்து ஜெகஜீவன்ராம் கருவேப்பிலங்குறிச்சி போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார். இது குறித்த புகாரின் பேரில் கருவேப்பிலங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெக ஜீவன்ராமை கைது செய்தனர்.
Next Story






