என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஆலங்குளம் அருகே கொலை முயற்சி வழக்கில் 2 வாலிபர்களுக்கு 5 ஆண்டு சிறை
- இடப்பிரச்சினை தொடர்பாக மாரிக்கண்ணுவை, செல்வமுருகன்,மாரிமுத்து ஆகியோர் கொலை செய்ய முயன்றனர்.
- செல்வமுருகன், மாரிமுத்து ஆகியோருக்கு தலா 5 வருட கடுங்காவல் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.
தென்காசி:
ஆலங்குளம் அருகே உள்ள வீராணத்தை சேர்ந்தவர் மாரிகண்ணு. விவசாயி. கடந்த 2016-ம் ஆண்டு இடப்பிரச்சினை தொடர்பாக மாரிக்கண்ணு வை, வீராணத்தை சேர்ந்த செல்வமுருகன் (வயது 30), ஊத்துமலையை சேர்ந்த மாரிமுத்து (35) ஆகியோர் அரிவாளால் தாக்கி கொலை செய்ய முயன்றனர்.
இதுதொடர்பாக வீ.கே. புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வமுருகன், மாரிமுத்துவை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு தென்காசி முதன்மை உதவி அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் நீதிபதி ரஷ்கின் ராஜ் தலைமையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கொலை முயற்சி வழக்கில் செல்வமுருகன், மாரிமுத்து ஆகியோருக்கு தலா 5 வருட கடுங்காவல் தண்டனையும், தலா ரூ.1 லட்சமும் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
Next Story