search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மேட்டுப்பாளையம் அருகே கஞ்சா விற்ற வாலிபர் 2 பேர் கைது
    X

    மேட்டுப்பாளையம் அருகே கஞ்சா விற்ற வாலிபர் 2 பேர் கைது

    • பெத்திக்குட்டை பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • போலீசார் கஞ்சாவை பறிமுதல் செய்து 2 பேரையும் கைது செய்தனர்.

    மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை பெத்திக்குட்டை பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சிறுமுகை போலீசார் பெத்திக்குட்டை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியை சேர்ந்த குடில் மகன் ஹரிபிரதாப் (வயது20), பவானிசாகர் பகுதியை சேர்ந்த ரவி மகன் கருப்புசாமி (வயது27) ஆகிய 2 பேரும் சந்தேகத்திற்கு இடமாக அப்பகுதியில் நின்று கொண்டிருந்தனர். அவர்களை பிடித்து விசாரணை நடத்திய போது 500 கிராம் கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் கஞ்சாவை பறிமுதல் செய்து 2 பேரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×