என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
அம்பை மோட்டார் சைக்கிள் திருட்டு வழக்கில் 2 பேர் கைது
- அம்பாசமுத்திரத்தில் உள்ள புது அம்மன் கோவில் தெருவை சேர்ந்த சீனிவாசன் (வயது42), இவர் கடந்த 14-ந் தேதி அன்று தனது இருசக்கர வாகனத்தில் தாமிரபரணி ஆற்றங்கரையில் குளிக்க சென்றார்.
- இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் வாசுதேவன் தலைமையில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
கல்லிடைக்குறிச்சி:
அம்பாசமுத்திரத்தில் உள்ள புது அம்மன் கோவில் தெருவை சேர்ந்த சீனிவாசன் (வயது42), இவர் கடந்த 14-ந் தேதி அன்று தனது இருசக்கர வாகனத்தில் தாமிரபரணி ஆற்றங்கரையில் குளிக்க சென்றார்.
அப்போது மோட்டார் சைக்கிளை படித்துறை அருகே நிறுத்திவிட்டு குளிக்க சென்று விட்டு திரும்பி வந்து பார்த்தப்போது, அதனை காணவில்லை.
இதுகுறித்து சீனிவாசன் அம்பை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர் வாசுதேவன் தலைமையில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
இதில் நெல்லை தாழையூத்து சங்கர் நகரை சேர்ந்த நாகராஜன் (24), மேலப்பாளையம் அகமது பிள்ளை தெருவை சேர்ந்த முகமது அபுபக்கர் சித்திக் (21) ஆகிய இருவரும் சேர்ந்து மோட்டார் சைக்கிளை திருடியது தெரியவந்தது.
இதையடுத்து அம்பை போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு நாகராஜன், முகமது அபுபக்கர் சித்திக் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்