என் மலர்
உள்ளூர் செய்திகள்

களக்காடு அருகே புகையிலை பொருட்கள் கடத்திய 2 பேர் கைது
- ஊச்சிக்குளம் விலக்கில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
- புகையிலை பொருட்களை விற்பனை செய்ய கடத்தி வந்த 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
களக்காடு:
களக்காடு அருகே உள்ள ஊச்சிக்குளம் விலக்கில் சப்-இன்ஸ்பெக்டர் ரெங்கசாமி தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது நெல்லை டவுன், வயல்தெருவை சேர்ந்த சுப்பிரமணியன் என்ற கடமுடா முருகன் (வயது 39), தாழையூத்து, கரையிருப்பு, வடக்கு தெருவை சேர்ந்த மணிகண்டன் (36) ஆகி யோர் வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனை செய்தனர்.
அப்போது, அவர்கள் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்வதற்காக கடத்தி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 6 கிலோ 750 கிராம் புகையிலை பொரு ட்களும், மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டது.
Next Story






