search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேலத்தில் முதியவரை மிரட்டி பணம் பறித்த பிரபல ரவுடி உள்பட 2 பேர் கைது
    X

    சேலத்தில் முதியவரை மிரட்டி பணம் பறித்த பிரபல ரவுடி உள்பட 2 பேர் கைது

    • சேலம் சீலநாயக்கன்பட்டி காஞ்சி நகர் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 52). இவர் நள்ளிரவு 12.30 மணி அளவில் தனது வீட்டின் அருகே நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த 2 வாலிபர்கள் கத்தி முனையில் அவரிடம் இருந்து ரூபாய் 1000 பறித்துக் கொண்டனர்.
    • இதனால் அதிர்ச்சி அடைந்த சீனிவாசன் கூச்சலிட்டார். இதனைக் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் திரண்டு வந்து அந்த 2 வாலிபர்களையும் பிடித்து அன்னதானப்பட்டி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

    சேலம்:

    சேலம் சீலநாயக்கன்பட்டி காஞ்சி நகர் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 52). இவர் நள்ளிரவு 12.30 மணி அளவில் தனது வீட்டின் அருகே நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த 2 வாலிபர்கள் கத்தி முனையில் அவரிடம் இருந்து ரூபாய் 1000 பறித்துக் கொண்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த சீனிவாசன் கூச்சலிட்டார். இதனைக் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் திரண்டு வந்து அந்த 2 வாலிபர்களையும் பிடித்து அன்னதானப்பட்டி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

    போலீசாரின் விசாரணையில் தாதகாப்பட்டி தாகூர் தெருவை சேர்ந்த சேகர் மகன் ஜடேஜா என்கிற தியாகராஜன் ( 32) மற்றும் சந்தியூர் ஆட்டையாம்பட்டி பகுதியைச் சேர்ந்த மாயக்கண்ணன் மகன் தாஸ் ( 19) ஆகியோர் என்பதும் ஜடேஜா மீது போலீஸ் நிலையங்களில் வழக்கு உள்ளது. அவர் ரவுடி செயல்களில் ஈடுபட்டு வந்ததும், தெரியவந்தது.

    போலீசார், பிடிபட்டவர்களிடம் காஞ்சி நகர் பகுதியில் ஏதேனும் வீட்டை நோட்டமிட்டு கொள்ளை அடிக்க வந்தார்களா? என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×