search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சுல்தான்பேட்டையில்  கஞ்சா விற்ற 2 பேர் கைது
    X

    சுல்தான்பேட்டையில் கஞ்சா விற்ற 2 பேர் கைது

    • செஞ்சேரி மற்றும் எஸ் குமாரபாளையம் ஆகிய பகுதிகளில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
    • இருவர் போலீசை பார்த்ததும் தப்பியோட முயற்சி செய்தனர்.

    சூலூர்

    சூலூர் அருகே சுல்தான்பேட்டை காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாக சுல்தான் பேட்டை போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து சுல்தான்பேட்டை செஞ்சேரி மற்றும் எஸ் குமாரபாளையம் ஆகிய பகுதிகளில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக வந்த இருவர் போலீசை பார்த்ததும் தப்பியோட முயற்சி செய்தனர். உடனடியாக சுல்தான்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார், தனிப்பிரிவு காவலர் வரதராஜன், தலைமை காவலர் ராமகிருஷ்ணன், காவலர் ஜெயக்குமார் உள்ளிட்ட தனிப் படையினர் அவர்களை மடக்கி பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

    அப்போது அவர்கள் எஸ் குமாரபாளையத்தைச் சேர்ந்த ரமேஷ் (44) மற்றும் அதே பகுதியை சேர்ந்த ரங்கசாமி(63) என தெரிய வந்தது. அவர்கள் இருவரும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்களிடமிருந்து 1.100கிலோ கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இருவரையும் கைது செய்த சுல்தான்பேட்டை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    Next Story
    ×