என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வண்டலூரில் சோகம் - கார் மோதிய விபத்தில் தாய், மகள் உயிரிழப்பு
    X

    சாலை விபத்து

    வண்டலூரில் சோகம் - கார் மோதிய விபத்தில் தாய், மகள் உயிரிழப்பு

    • வண்டலூரில் கார் மோதிய விபத்தில் சிக்கி தாய், மகள் உயிரிழந்தனர்.
    • விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பிச்சென்ற மர்ம நபரை போலீசார் தேடிவருகின்றனர்.

    செங்கல்பட்டு:

    சென்னை அடுத்த வண்டலூரில் இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சிக்கி தாய் உமா மகேஸ்வரி, மகள் கிருத்திகா ஆகியோர் உயிரிழந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    விசாரணையில், வண்டலூர் மேம்பால இறக்கத்தில் சென்றபோது விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பிச்சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.

    இரு சக்கர வாகனம் மீது கார் மோதி தாய், மகள் பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×