என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோவையில் மோட்டார் சைக்கிள் திருடிய 2 சிறுவர்கள் கைது
- மோட்டார் சைக்கிளை தடாகம் ரோடு பாரதி நகரில் நிறுத்தி விட்டு நண்பரை பார்க்க சென்றார்.
- சிறுவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.
கோவை
கோவை சாமிஅய்யர் புதுவீதியை சேர்ந்தவர் சுந்தரம். இவரது மகன் பிஷ்ணு பிரசாத் (வயது 25). சம்பவத்தன்று இவர் தனது மோட்டார் சைக்கிளை தடாகம் ரோடு பாரதி நகரில் நிறுத்தி விட்டு நண்பரை பார்க்க சென்றார்.
திரும்பி வந்த பார்த்த போது மோட்டார் சைக்கிள் திருடப்பட்டு இருந்தது. இது குறித்து விஷ்ணு பிரசாத் ஆர்.எஸ்.புரம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிளை திருடிய 18, 17 வயதுடைய 2 சிறுவர்களை கைது செய்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.
Next Story






