search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடலூர் அருகேவாலிபரை கத்தியால்குத்திய 2 பேர் கைது.
    X

    கைதான இருவரை படத்தில் காணலாம்.

    கடலூர் அருகேவாலிபரை கத்தியால்குத்திய 2 பேர் கைது.

    • இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
    • பிரபாகரனை கத்தியால் தொடை மற்றும் வயிற்றுப் பகுதி யில் குத்தினர்.

    கடலூர்:

    கடலூர் வண்டிபாளை யம் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் மாசிலாமணி. அவரது மகன் பிரபாகரன் (32). இவர் தனக்கு சொந்தமான ஆட்டோவை புதுச்சேரி மாநிலம் குருவிநத்தம் பகுதியை சேர்ந்த கலைமணி என்பவருக்கு வாடகைக்கு விட்டுள்ளார். ஆனால் கலைமணி பிரபாகரனுக்கு வாடகை பணத்தை சரியாக கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.இது குறித்து பிரபாகரன், கலைமணியிடம் சென்று கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் பிரபாகரன் நேற்று இரவு உண்ணாமலை செட்டி சாவடி பகுதியில் வந்து கொண்டிருந்த போது அங்கு வந்த கலை மணி மற்றும் 3 பேர் பிரபாகரனை வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடு பட்டுள்ளனர்

    மேலும் பிரபாகரனை கத்தியால் தொடை மற்றும் வயிற்றுப் பகுதி யில் குத்தினர். இதில் காயமடைந்த பிரபா கரன் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்இதுகுறித்து கடலூர் புதுநகர் போலீசார் குருவி நத்தம் சேர்ந்த கலைமணி, புதுச்சேரி லால்பேட்டை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 31), புதுச்சேரி குருவி நத்தம் சேர்ந்த ஸ்ரீதர் (வயது 24), அழகிய நத்தம் சேர்ந்த செல்வம் ஆகிய 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதில் ராஜேஷ் , ஸ்ரீதர் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

    Next Story
    ×