search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெய்வேலி அருகே என்ஜினீயர் வீட்டில்  19 பவுன் நகை கொள்ளை
    X

    நெய்வேலி அருகே என்ஜினீயர் வீட்டில் 19 பவுன் நகை கொள்ளை

    • சவுதி அரேபியாவில் பொறியாளராக கடந்த ஏழு ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகிறார்.
    • நெய்வேலி நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    கடலூர்:

    நெய்வேலி அருகே வடக்குத்து காந்திநகர் வி.கே. சாமி தெருவில் வசித்து வருபவர் அப்துல் கனி அவரது மருமகன் சையது ரஹ்மான் வி.கே.சாமி தெருவில் வசிக்கின்றனர். இவர் சவுதி அரேபியாவில் பொறியாளராக கடந்த ஏழு ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ஷாகி நிஷா மற்றும் பேரன் சையது ரியாஸ் ஆகிய இருவரையும் கடந்த 30-ந் தேதி இவரது தந்தை அப்துல் கனி சென்னை விமான நிலையத்திற்கு சென்று சவுதி அரேபியா நாட்டிற்கு விமானம் ஏற்றிவிட்டு வந்ததாகவும் பின்னர் நேற்று காலை தனது மனைவியுடன் தனது மகள் வீட்டிற்கு சென்று பார்த்த பொழுது வீட்டின் முன்பக்கம் இருந்த இரும்பு கேட் மற்றும் மர கதவுகள் உடைக்கப்பட்டுள்ள நிலையில் கிடந்தது.

    அதிர்ச்சி அடைந்த அப்துல் கனி வீட்டின் உள்ளே சென்று பார்த்த பொழுது வீட்டில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தது.மேலும் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 19 பவுன் தங்க நகையை மர்ம நபர்கள் உடைத்து திருடி சென்றது தெரியவந்தது. இது குறித்து அப்துல் கனி நெய்வேலி நகர காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் நெய்வேலி நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் குடியிருப்பு பகுதியில் வீடு உடைக்கப்பட்டு நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    Next Story
    ×