search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தி.நகர் பெருமாள் கோவிலில் 15-ந்தேதி பிரம்மோற்சவம் தொடக்கம்
    X

    தி.நகர் பெருமாள் கோவிலில் 15-ந்தேதி பிரம்மோற்சவம் தொடக்கம்

    • மாலை 6.30 மணிக்கு சேஷ வாகனத்தில் பெருமாள் அருள்பாலிக்கிறார்.
    • பிரம்மோற்சவத்தின் கடைசி நாளான 23-ந் தேதி காலை சக்ரஸ்நானம் நடக்கிறது. அன்று மாலை 6.30 மணிக்கு பட்டாபிஷேகம் நடக்கிறது.

    சென்னை:

    தி.நகர் வெங்கட் நாராயண சாலையில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் வெங்கடேச பெருமாள் கோவில் உள்ளது.

    திருமலையில் நடப்பது போல இந்த கோவிலிலும் ஆண்டு தோறும் பிரம்மோற்சவம் விமரிசையாக நடத்தப்படும். இந்த ஆண்டிற்கான பிரம்மோற்சவம் வரும் 15-ந் தேதி தொடங்குகிறது.

    அன்று மாலை 6.30 மணிக்கு சேஷ வாகனத்தில் பெருமாள் அருள்பாலிக்கிறார். அடுத்தநாள் ஹம்சவாசனத்திலும், 17-ந் தேதி முத்து பந்தலிலும் 15-ந் தேதி கல்ப விருட்சத்திலும் உலா வருகிறார். வரும் 19ந் தேதி இரவு 7 மணிக்கு கருட சேவை உற்சவம் நடக்கிறது. 20-ந்தேதி காலை 9 மணிக்கு ஹனுமந்த வாகனத்திலும் மாலை 6.30 மணிக்கு கஜ வாகன புறப்பாடும் நடக்கிறது.

    வரும் 21-ந் தேதி காலை சூரிய பிரபையிலும், மாலை சந்திர பிரபையிலும் உலா வருகிறார். அஷ்வ வாகனத்தில், 22-ந் தேதி மாலை 6.30 மணிக்கு வலம் வந்து பெருமாள் அருள்பாலிக்கிறார். பிரம்மோற்சவத்தின் கடைசி நாளான 23-ந் தேதி காலை சக்ரஸ்நானம் நடக்கிறது. அன்று மாலை 6.30 மணிக்கு பட்டாபிஷேகம் நடக்கிறது.

    இந்த தகவலை திருமலை திருப்பதி தேவஸ்தான தமிழக, புதுச்சேரி ஆலோசனைக்குழு தலைவர் சேகர் தெரிவித்தார். இக்கோவிலில் 3 நாட்களாக நடந்த பவித்ர உற்சவம் நேற்றுடன் முடிந்தது.

    Next Story
    ×