என் மலர்
உள்ளூர் செய்திகள்

பேரூரில் 14 பவுன் தங்க நகைகள் கொள்ளை
- செயின், வளையல், கைசெயின், கம்மல் உள்பட 10 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர்.
- மாலையில் வீடு திரும்பிய திலிப்குமார் வீட்டில் இருந்த நகைகள் கொள்ளை போயிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார்.
கோவை,
கோவை பேரூர் அருகே உள்ள தீத்திப்பாளையத்தை சேர்ந்தவர் வெள்ளியங்கிரி (வயது 38). தனியார் நிறுவன ஊழியர்.
சம்பவத்தன்று இவர் தனது வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்றார். அப்போது இவரது வீட்டின் முன் பக்க கதவை உடைத்து மர்மநபர்கள் உள்ளே நுழைந்தனர். அவர்கள் அறையில் இருந்த பீேராவை திறந்து அதில் இருந்த செயின், வளையல், கைசெயின், கம்மல் உள்பட 10 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர். மாலையில் வீடு திரும்பிய வெள்ளியங்கிரி கதவு உடைக்கப்பட்டு திறந்து இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது 10 பவுன் நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.
ஆறுமுக கவுண்டனூரை சேர்ந்தவர் திலிப்குமார் (41).டிரைவர். சம்பவத்தன்று இவர் குழந்தையை பள்ளிக்கு அனுப்பி விட்டு வேலைக்கு சென்றார். அப்போது இவரது வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்த மர்மநபர்கள் அறையில் இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த செயின், வளையல் உள்பட 4 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர். மாலையில் வீடு திரும்பிய திலிப்குமார் வீட்டில் இருந்த நகைகள் கொள்ளை போயிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இந்த 2 கொள்ளை சம்பவங்கள் குறித்து பேரூர் போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் சம்பவஇடத்துக்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் வீட்டில் பதிவாகி இருந்த கொள்ளையர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர்.
இதனை வைத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பட்டபகலில் வீடுகளின் கதவை உடைத்து 14 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்கைளை தேடி வருகிறார்கள்.