என் மலர்
உள்ளூர் செய்திகள்

டெக்ஸ்டைல் நிறுவனத்தில் ஜவுளி வாங்கி ரூ.13.50 லட்சம் மோசடி
- சீனிவாசன் (வயது 55). இவர் கொண்டலாம்பட்டியில் டெக்ஸ்டைல் பேப்ரிக்ஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
- ஸ்ரேயா நிறுவனம் ஆகியோர் ஜவுளி வாங்கிக்கொண்டு, அதற்கு உண்டான தொகை ரூ.13,43,789 இதுவரை திருப்பி தரவில்லை.
சேலம்:
சேலம் அருகே கொண்ட லாம்பட்டி முன்சீப் தோட்டம் கள்ளிக்கோட்டை மெயின்ரோடு பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 55). இவர் கொண்டலாம்பட்டியில் டெக்ஸ்டைல் பேப்ரிக்ஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
இவரிடம் கடந்த 2016 முதல் சேலம் குகை புலிக்குத்தி தெருவில் எக்ஸ்போர்ட் நிறுவனம் நடத்தி வரும் விவேக்நாத் (34), சந்திரபோஸ் யாதவ் (33), பொன்னம்மாப்பேட்டை தாண்டவன் நகர் பகுதியை சேர்ந்த மோகன் (62) மற்றும் ஸ்ரேயா நிறுவனம் ஆகியோர் ஜவுளி வாங்கிக்கொண்டு, அதற்கு உண்டான தொகை ரூ.13,43,789 இதுவரை திருப்பி தரவில்லை.
இதுகுறித்து சேலம் மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீசில் சீனிவாசன் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






