என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செங்கோட்டை கோவிலில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு பூஜை
    X

    திருவிளக்கு பூஜை நடந்தபோது எடுத்த படம்.

    செங்கோட்டை கோவிலில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு பூஜை

    • செங்கோட்டை கோவிலில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு பூஜை 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
    • இதில் 108 பெண்கள் கலந்து கொண்டு திருவிளக்கு வழிபாடு நடத்தினர்.

    செங்கோட்டை:

    செங்கோட்டை ஆரியநல்லூர் தெரு யாதவர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட முப்புடாதி அம்மன் கோவிலில் கொடைவிழாவை யொட்டி நாடு செழிக்கவும், மக்கள் நோய்- நொடி இல்லாமல் இருக்கவும், மழை வேண்டியும், கொரோனா தொற்றில் இருந்து முழுவதுமாக விடுபடுவதுடன் புதிய நோயில் இருந்து மக்களை காத்திட வேண்டி 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

    பூஜையையொட்டி அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம், சிறப்பு பூஜையும் நடந்தது. அதனை தொடர்ந்து திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் 108 பெண்கள் கலந்து கொண்டு திருவிளக்கு வழிபாடு நடத்தினர். முடிவில் பக்தர்களுக்கு அருள் பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் சுற்று வட்டார பகுதியை சோந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×