என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
நெல்லை மாநகரில் திருடப்பட்ட 104 செல்போன்கள் மீட்டு உரியவர்களிடம் ஒப்படைப்பு
- புகார்களுக்கு துரிதமாக நடவடிக்கை எடுத்து மோசடி செய்த வங்கி கணக்குகளை முடக்கி ரூ. 15 லட்சத்து 83 ஆயிரம் மீட்கப்பட்டது.
- மீட்கப்பட்டவை இன்று உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
நெல்லை:
நெல்லை மாநகர பகுதியில் காணாமல் போன செல்போன்கள் குறித்து அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் மாநகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
அதன் அடிப்படையில் மீட்கப்பட்ட ரூ. 20 லட்சம் மதிப்பிலான 104 செல்போன்களை இன்று மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ்குமார் கமிஷனர் அலுவலகத்தில் வைத்து உரியவர்களிடம் ஒப்படைத்தார்.
இதேபோல் இணையதளம் மூலமாக வேலை வாங்கித் தருவதாகவும், பரிசுகள் விழுந்து இருப்பதாகவும் கூறி பணம் திருடப்பட்ட வழக்குகளில் மீட்கப்பட்ட ரூ.3 லட்சத்து 62 ஆயிரம் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
மேலும் இணையதளம் மூலமாக பணம் மோசடி செய்யப்பட்டதாக பெறப்பட்ட புகார்களுக்கு துரிதமாக நடவடிக்கை எடுத்து மோசடி செய்த வங்கி கணக்குகளை முடக்கி ரூ. 15 லட்சத்து 83 ஆயிரம் மீட்கப்பட்டது. அவையும் இன்று உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
அப்போது துணை போலீஸ் கமிஷனர்கள் டி.பி. சுரேஷ்குமார், சுரேஷ்குமார், மாநகர சைபர் க்ரைம் இன்ஸ்பெக்டர் சண்முகவடிவு, சப்-இன்ஸ்பெக்டர்கள் நடராஜன், வித்யாலட்சுமிி, கலை சந்தனமாரி, தொழில்நுட்ப சப்-இன்ஸ்பெக்டர் ஜெயபிரகாஷ் மற்றும் போலீசார் உடனிருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்