என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடலூர்  மாவட்டத்தில் காய்ச்சலை கட்டுப்படுத்த1000 மருத்துவ முகாம் கலெக்டர் தகவல்
    X

    கடலூர் மாவட்டத்தில் காய்ச்சலை கட்டுப்படுத்த1000 மருத்துவ முகாம் கலெக்டர் தகவல்

    • 1000 காய்ச்சல் மருத்துவ முகாம்கள் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
    • ஒட்டுமொத்த தூய்மைப்பணி மேற்கொள்ளப்படும்.

    கடலூர்:

    கடலூர் கலெக்டர் அருண் தம்புராஜ் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- கடலுார் மாவட்டத்தில் கடந்த 15 நாட்களாக பருவநிலை மாற்றத்தினால் ஏற்பட்டுள்ள காய்ச்சலை கட்டுப்படுத்த தமிழக முதல்-அமைச்சரின் உத்தரவின் பேரில் தமிழகம் முழுவதும் நாளை( 1 ந்தேதி) முதல் தினசரி 1000 காய்ச்சல் மருத்துவ முகாம்கள் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

    கடலூர் மாவட்டத்தில் நாளை மாவட்டத்தில் உள்ள கிராமப்புறம் மற்றும் நகர்புறங்களில் 126 இடங்களில் காய்ச்சல் மருத்துவ முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இம்முகாமில் காய்ச்சலில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சிறு உபாதைகள் உள்ளவர்களுக்கு சிகிச்சை அளித்திடவும், தேவைப்படுபவர்களுக்கு மேல் சிகிச்சைக்கான பரிந்து ரையும் அளித்திட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் களப்பணியாள ர்கள் மூலம் வீடுகள் தோறும் சென்று காய்ச்சல் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு காய்ச்சல் பாதித்தவர்கள்சி கிச்சைக்காக மருத்துவ முகாமிற்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.

    இதுமட்டுமன்றி உள்ளா ட்சியின் மூலம் ஒட்டுமொத்த தூய்மைப்பணி மேற்கொ ள்ளப்படும். மேலும் கொசுப்புழு பணியாளர்கள் மூலம் வீடுகள் தோறும் சென்று கொசுப்புழு அளித்தல், புகை மருந்து அடித்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும். பொது மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்குவதை உறுதிசெய்யும் விதமாக உள்ளாட்சிகள் மூலம் மேல்நிலைத் தொட்டிகளை சுத்தம் செய்தல் குடிநீர் குழாய்களில் ஏற்பட்டுள்ள உடைப்புகளை சரிசெய்தல், குழிகுழாயினை அப்பு றப்படுத்துதல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொ ள்ளப்படும். பள்ளி மாணவர்கள் பரிசோதிக்கப்பட்டு தேவைப்படும் சிகிச்சை அளிக்கப்படும். மேலும் காய்ச்சல் காரணமாக பள்ளிக்கு வராமல் இருக்கும் பள்ளி மாணவர்கள் குறித்த விவரத்தினை சம்மந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்கள் உடன் நடவடிக்கை மேற்கொள்ளும் பொரு ட்டு அந்தந்த ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவல ர்களுக்கு தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    ஆகவே பொதுமக்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி காய்ச்சல் மருத்துவ முகாமில் பங்குபெற்று சிகிச்சை மேற்கொள்ள கேட்டு க்கொள்ள ப்படுகிறது. மேலும் டெங்குவை பரப்பும் கொசுவின் உற்பத்தியினை கட்டுப்படுத்திட தங்கள் வீடுகள் மற்றும் சுற்றுப்பு றத்தினை தூய்மையாக வைத்திடவும், காய்ச்சல் ஏற்பட்டால் சுய சிகிச்சை பெறுவதையும், மருந்து கடைகளில் டாக்டரின் பரிந்துரை இல்லாமல் மருந்து வாங்கி உட்கொள்வதையும் தவிர்த்திட வேண்டும் . இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×