search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    100 நாள் வேலை திட்ட கணக்கு பதிவுகளை கலெக்டர் ஆய்வு
    X

    ஊராட்சி அலுவலகத்தில் கலெக்டர் லலிதா கணக்கு பதிவுகளை ஆய்வு செய்தார்.

    100 நாள் வேலை திட்ட கணக்கு பதிவுகளை கலெக்டர் ஆய்வு

    • பாழடைந்த நிலையில் இருந்த ஆரம்ப சுகாதார நிலையத்தை பார்வையிட்டு சீரமைக்க நடவடிக்கைகளை மேற்கொள்வதாக கூறினார்.
    • கோவில்பத்து, கிடாரங்கொண்டான் ஊராட்சிகளில் நடைபெறும் திட்ட பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்தார்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயில் ஒன்றியம், மேலப்பெரும்பள்ளம் ஊராட்சியில் கலெக்டர் லலிதா சத்துணவு கட்டிடத்தை திறந்து வைத்தார்.

    நூலகம் மற்றும் பஞ்சாயத்து கணக்குகள் 100 நாள் திட்டத்தில் வேலை நடைபெறும் கணக்கு பதிவுகளை ஆய்வு செய்தார்.

    பின்னர் பாழடைந்த நிலையில் இருந்த ஆரம்ப சுகாதார நிலையத்தை பார்வையிட்டு சீரமைக்க நடவடிக்கைகளை மேற்கொள்வதாக கூறினர்.

    பின்னர் மரக்கன்றுகளை நட்டார்,தலையுடையார் கோவில்பத்து, கிடாரங்கொண்டான் ஊராட்சிகளில் நடைபெறும் திட்ட பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்தனர். குறைகளை கண்டறிந்து நடவடிக்கை எடுத்தார்.

    அப்போது செம்பனார்கோவில் ஒன்றிய ஆணையர் மஞ்சுளா, வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயலட்சுமி, தி.மு.க. மாவட்ட துணைச் செயலாளர் ஞானவேலன் ஊராட்சி மன்ற தலைவர் தேவிசுரேஷ், துணைத்தலைவர் ராஜகோபால், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில்குமார், ஒன்றிய பணி மேற்பார்வையாளர் நாகேந்திரன், உள்ளிட்ட வார்டு உறுப்பினர்கள் உடனிருந்தனர்.

    Next Story
    ×