search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பா.ஜ.க. நிர்வாகிகள் உள்பட  150 பேர் திடீர் கைது
    X

    பா.ஜ.க. நிர்வாகிகள் உள்பட 150 பேர் திடீர் கைது

    • உசிலம்பட்டியில் சாலை மறியலில் ஈடுபட்ட 150 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • ஊர்வலமாக சென்று ஆர்.டி.ஓ அலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுத்தனர்.

    விருதுநகர்

    விருதுநகர்-சாத்தூர் ரோட்டில் ரூ. 2 ஆயிரம் கோடி மதிப்பில் ஜவுளி பூங்கா அமைக்க மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    இதேபோல் காரியாபட்டி யில் ரூ. 150 கோடி மதிப்பில் நவீன சாயப்பட்டறை அமைக்கவும் மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஆனால் மேற்கண்ட திட்டங்களை செயல்படுத்த தமிழக அரசு ஒப்புதல் வழங்காமல் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    இதை கண்டித்தும், மத்திய அரசு திட்டங்களை செயல்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி சிவகாசியில் இருந்து விருதுநகருக்கு மாநில பொதுச் செயலாளர் சீனிவாசன் தலைமையில் பா.ஜ.க.வினர் பேரணி செல்ல முடிவு செய்திருந்தனர். ஆனால் இதற்கு அனுமதி வழங்காத மாவட்ட போலீசார் சிவகாசியில் தங்கியிருந்த சீனிவாசன், மதுரை புறநகர் மாவட்டத்தலைவர் மகா சுசீந்திரன் மற்றும் நிர்வாகிகள் உள்பட 30 பேரை இன்று காலை கைது செய்தனர்.

    இதேபோல் திருத்தங்கல், ஆமத்தூர் பகுதியில் பேரணிக்கு தயாராக இருந்த 120-க்கும் மேற்பட்ட பா.ஜ.க.வினர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

    இந்த கைதை கண்டித்து உசிலம்பட்டி தேவர் சிலை அருகே இன்று காலை சாலை மறியல் நடந்தது. மாவட்ட துணைத் தலைவர் சொக்கநாதன் மாவட்ட பொது செயலாளர் மொக்கராஜ் ஆகியோர் தலைமையில் ஒன்றிய தலைவர்கள் கருப்பையா சின்னச்சாமி பாக்கியராஜ் நகரச் செயலாளர் முத்தையா மற்றும் பாரதிய ஜனதா கட்சியினர் சாலை மறியல் செய்தனர் போலீசார் இவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்தனர் .ஊர்வலமாக சென்று ஆர்.டி.ஓ அலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுத்தனர்.

    Next Story
    ×