என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா
- கல்லாத்தூர் திரௌபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா
- அம்மனுக்கு ௧௬ வகையான திரவிய பொடிகளில் சிறப்பு அபிஷேகம்
ஜெயங்கொண்டம்,
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கல்லாத்தூர் கிராமத்தில் 100 ஆண்டுக்கு மேல் பழமை வாய்ந்த திரௌபதி அம்மன் கோயில் தீமிதி திருவிழா நடைபெற்றது. முன்னதாக திருவிழாவில் அம்மனுக்கு பால். சந்தனம். திரவிய பொடி. உள்ளிட்ட 16 வகையான அபிஷேகம் செய்து, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் கல்லாத்தூர் வண்ணான் ஏரியிலிருந்து கரகம் எடுத்துவரப்பட்டது. வாண வேடிக்கையுடன், மேள, தாளங்கள் முழங்க முக்கிய வீதி வழியாக கோயிலை சென்றடைந்தது. அதன் பின்னர் 300- க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். ஊராட்சி மன்ற தலைவர் செந்தமிழ்செல்வன், ஊர் நாட்டார்கள் குமார், பழனிச்சாமி, இளையராஜா ராஜேந்திரன், பொன்வடிவேல், சுந்தரம் உள்ளிட்டோர் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். தீமிதி திருவிழாவை முன்னிட்டு ஒரு மாத காலமாக பூமுடையான் குடியாடு மகாபாரத ஆசிரியர் கொளஞ்சிநாதன் தலைமையில் மகாபாரதம் நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெற்றது. மேலும் 18 மண்டகப் பிடிகள் தினந்தோறும் திரௌபதி அம்மனுக்கு அபிஷேகங்கள் மற்றும் ஆராதனை நடைபெற்றது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்