search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திடக்கழிவு மேலாண்மை குறித்து பள்ளி மாணவர்களுக்கு போட்டி
    X

    திடக்கழிவு மேலாண்மை குறித்து பள்ளி மாணவர்களுக்கு போட்டி

    • 4வது சனிக்கிழமையில், ஒவ்வொரு தலைப்புகளின் கீழ் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
    • துப்புரவு பணியாளர்களுக்கான சுகாதார முகாம் நடத்தப்படும்.

    உடுமலை:

    உடுமலை தாலுகாவில் உள்ள பேரூராட்சிகளில், 'நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம்' என்ற பெயரில் துாய்மைப்பணி மேற்கொள்ளப்படுகிறது. அதன்படி வீடுகளிலேயே குப்பையை, மக்கும் மற்றும் மக்காத குப்பையாக வகை பிரித்து, சுற்றுப்புற தூய்மை, பாலித்தீன் தவிர்ப்பு குறித்து அறிவுறுத்தப்படுகிறது.இதற்கென இரண்டாவது மற்றும் 4வது சனிக்கிழமையில், ஒவ்வொரு தலைப்புகளின் கீழ் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

    இதேபோல அடுத்த மாதம், 9-ந் தேதி சுகாதாரம் மற்றும் திடக்கழிவு மேலாண்மை நடவடிக்கைகளின் முக்கியத்துவம் குறித்து பள்ளி மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தப்படுகிறது. இதுகுறித்து பேரூராட்சி நிர்வாகத்தினர் கூறியதாவது:-

    குடியிருப்பு பகுதியில் சுகாதாரம் பேண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவ்வகையில், பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக, மாணவர்களுக்கு கழிவுநீரை பாதுகாப்பாக அகற்றுவது, திறந்தவெளியில் மலம் கழித்தலற்ற நிலையை உருவாக்குவது சமூக மற்றும் பொது கழிப்பறை சுத்தம் தொடர்பான ஓவியப்போட்டி நடத்தப்படும்.

    தவிர இவை தொடர்பான கண்காட்சி, குறும்படம் காண்பிப்பது, தெரு நாடகப்போட்டி நடத்துவது உள்ளிட்ட செயல்பாடுகள் முன்னெடுக்கப்படும். இது ஒருபுறமிருக்க வீணாக வீசியெறியப்படும் பொருளில் இருந்து கலைநயமிக்க பொருட்களை தயாரிக்கும் தொழில் முனைவோரை அடையாளம் கண்டு அவர்களை ஊக்குவிக்கப்படுவர்.துப்புரவு பணியாளர்களுக்கான சுகாதார முகாம் நடத்தப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

    Next Story
    ×