search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டொயோட்டா யாரிஸ் இந்திய வெளியீட்டு தகவல்கள்
    X

    டொயோட்டா யாரிஸ் இந்திய வெளியீட்டு தகவல்கள்

    டொயோட்டா யாரிஸ் இந்திய வெளியீட்டு தேதியை டொயோட்டா இந்தியா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
    புதுடெல்லி:

    டொயோட்டா இந்தியா நிறுவனம் புதிய யாரிஸ் செடான் மாடலை இந்தியாவில் மே 18-ம் தேதி வெளியிட இருப்பதாக அறிவித்துள்ளது. புதிய யாரிஸ் மாடலுக்கான முன்பதிவுகள் இந்தியாவில் ஏற்கனவே துவங்கியுள்ள நிலையில் இவற்றின் விநியோகம் இம்மாத இறுதியில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    புதிய டொயோட்டா யாரிஸ் செடான் வடிவமைப்பு கூர்மையாக உள்ளது. இதன் மெல்லிய ஹெட்லைட், டெயில்லைட், அகலமான கிரில் மற்றும் பின்ச் ரூஃப்லைன் உள்ளிட்டவை புதிய கொரோல்லா மற்றும் கேம்ரி மாடல்களில் உள்ளதை போன்று காட்சியளிக்கிறது.
    உள்புற கேபின் பெரிய இன்ஸ்ட்ரூமென்டேஷன் செய்யப்பட்டுள்ளது. 



    இதில் அனலாக் கடிகாரங்கள், 4.2 இன்ச் MID, 7 இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் யூனிட், ஜெஸ்ட்யூர் கன்ட்ரோல் கொண்ட டேஷ், போல்ஸ்டெர் செய்யப்பட்ட ஸ்டீரிங் வீல், மெல்லிய ஏ.சி. வென்ட்கள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் டையர் பிரெஷர் மானிட்டரிங் சிஸ்டம், அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய நெக் ரெஸ்டிரெயின்ட்கள் இடம்பெற்றிருக்கின்றன. 

    பாதுகாப்பை பொருத்த வரை யாரிஸ் மாடலில் ஏழு ஏர்பேக், ஏபிஎஸ், இபிஎஸ், இஎஸ்பி மற்றும் ஹில்-ஸ்டார்ட் அசிஸ்ட் உள்ளிட்ட வசதிகள் வழங்கப்படுகின்றன. டொயோட்டா யாரிஸ் மாடலில் 1.5 லிட்டர் VVT-i பெட்ரோல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 107 பிஎஸ், 140 என்எம் டார்கியூ செயல்திறன் வழங்குகிறது.

    இந்தியாவில் டொயோட்டா யாரிஸ் செடான் பேஸ் மாடல் விலை ரூ.8.75 லட்சத்தில் துவங்கி, டாப் என்ட் மாடலின் விலை ரூ.14.07 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    Next Story
    ×