என் மலர்
செய்திகள்

இந்தியாவில் புதிய சாதனை படைத்த ஹூன்டாய்
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் ஹூன்டாய் நிறுவனம் புதிய சாதனையை படைத்திருப்பதாக அறிவித்துள்ளது.
புதுடெல்லி:
தென் கொரியாவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் பிரபல ஆட்டோமொபைல் நிறுவனமான ஹூன்டாய் இந்திய சந்தையில் புதிய சாதனையை படைத்திருக்கிறது.
இந்தியாவில் ஹூன்டாய் நிறுவனம் தயாரித்த 50 லட்சத்து மாடலை வெளியிட்டுள்ளது. புத்தம் புதிய ஹூன்டாய் வெர்னா மாடலை அந்நிறுவனம் 50 லட்சம் மாடலாக தயாரித்துள்ளது. இந்திய பயணர் வாகன பிரிவில் மற்ற நிறுவனங்களுடன் ஒப்பிடும் போது வேகமாக இந்த மைல்கல் சாதனையை ஹூன்டாய் படைத்திருக்கிறது.
1998-ம் ஆண்டு இந்திய சந்தையில் கால்பதித்த ஹூன்டாய் நிறுவனம் 10 லட்சம் கார் தயாரித்த சாதனையை ஏப்ரல் 2007-ம் ஆண்டு கடந்தது. ஹூன்டாய் சான்ட்ரோ மாடல் கார் ஹூன்டாய் தயாரித்த 10 லட்சத்து மாடலாக அமைந்தது. இதைத் தொடர்ந்து 10 ஆண்டுகள் கழித்து 50 லட்சம் கார் தயாரித்த சாதனையை எட்டியுள்ளது.

10 லட்சம் கார்களை தயாரிக்க ஹூன்டாய் நிறுவனம் எட்டு ஆண்டுகளை எடுத்து கொண்டது. இதைத் தொடர்ந்து தயாரிப்பு பணிகளில் மும்முரம் காட்டிய ஹூன்டாய் 2010-ம் ஆண்டில் 20 லட்சம் கார் தயாரித்தது, பின் 2013-ம் ஆண்டிலேயே 30 லட்சம் மற்றும் 2015-ம் ஆண்டில் 40 லட்சம் கார்களை ஹூன்டாய் தயாரித்துள்ளது.
இந்த ஆண்டு 50 லட்சம் கார்களை தயாரித்த சாதனையை ஹூன்டாய் கடந்திருக்கும் நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் ஹூன்டாய் நிறுவனம் பத்து லட்சத்திற்கும் அதிகமான கார்களை விற்பனை செய்துள்ளது. இந்தியாவில் ஹூன்டாய் கிரான்ட் i10, i20, வெர்னா மற்றும் கிரெட்டா எஸ்.யு.வி. போன்ற மாடல்கள் அதிகம் விற்பனையாகி வருகின்றது.

புதிய மாடல் கார்களை வெளியிடுவது மட்டுமின்றி பல்வேறு பிரிவுகளில் புதிய வாகனங்களை அறிமுகம் செய்ய ஹூன்டாய் திட்டமிட்டு பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது. அந்த வகையில் ஹூன்டாய் நிறுவனம் சப்-4 மீட்டர் அளவுள்ள எஸ்.யு.வி. ரக கார் ஒன்றை வெளியிட இருப்பதாக கூறப்படுகிறது.
இந்தியாவில் ஹூன்டாய் விற்பனை மற்றும் சர்வீஸ் மையங்களின் எண்ணிக்கையை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்சமயம் வரை நாடு முழுக்க 2200க்கும் அதிகமான விற்பனை மற்றும் சர்வீஸ் மையங்களும், 422 ஊரக பகுதிகளில் மையங்களை இயக்கி வருகிறது.
தென் கொரியாவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் பிரபல ஆட்டோமொபைல் நிறுவனமான ஹூன்டாய் இந்திய சந்தையில் புதிய சாதனையை படைத்திருக்கிறது.
இந்தியாவில் ஹூன்டாய் நிறுவனம் தயாரித்த 50 லட்சத்து மாடலை வெளியிட்டுள்ளது. புத்தம் புதிய ஹூன்டாய் வெர்னா மாடலை அந்நிறுவனம் 50 லட்சம் மாடலாக தயாரித்துள்ளது. இந்திய பயணர் வாகன பிரிவில் மற்ற நிறுவனங்களுடன் ஒப்பிடும் போது வேகமாக இந்த மைல்கல் சாதனையை ஹூன்டாய் படைத்திருக்கிறது.
1998-ம் ஆண்டு இந்திய சந்தையில் கால்பதித்த ஹூன்டாய் நிறுவனம் 10 லட்சம் கார் தயாரித்த சாதனையை ஏப்ரல் 2007-ம் ஆண்டு கடந்தது. ஹூன்டாய் சான்ட்ரோ மாடல் கார் ஹூன்டாய் தயாரித்த 10 லட்சத்து மாடலாக அமைந்தது. இதைத் தொடர்ந்து 10 ஆண்டுகள் கழித்து 50 லட்சம் கார் தயாரித்த சாதனையை எட்டியுள்ளது.

10 லட்சம் கார்களை தயாரிக்க ஹூன்டாய் நிறுவனம் எட்டு ஆண்டுகளை எடுத்து கொண்டது. இதைத் தொடர்ந்து தயாரிப்பு பணிகளில் மும்முரம் காட்டிய ஹூன்டாய் 2010-ம் ஆண்டில் 20 லட்சம் கார் தயாரித்தது, பின் 2013-ம் ஆண்டிலேயே 30 லட்சம் மற்றும் 2015-ம் ஆண்டில் 40 லட்சம் கார்களை ஹூன்டாய் தயாரித்துள்ளது.
இந்த ஆண்டு 50 லட்சம் கார்களை தயாரித்த சாதனையை ஹூன்டாய் கடந்திருக்கும் நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் ஹூன்டாய் நிறுவனம் பத்து லட்சத்திற்கும் அதிகமான கார்களை விற்பனை செய்துள்ளது. இந்தியாவில் ஹூன்டாய் கிரான்ட் i10, i20, வெர்னா மற்றும் கிரெட்டா எஸ்.யு.வி. போன்ற மாடல்கள் அதிகம் விற்பனையாகி வருகின்றது.

புதிய மாடல் கார்களை வெளியிடுவது மட்டுமின்றி பல்வேறு பிரிவுகளில் புதிய வாகனங்களை அறிமுகம் செய்ய ஹூன்டாய் திட்டமிட்டு பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது. அந்த வகையில் ஹூன்டாய் நிறுவனம் சப்-4 மீட்டர் அளவுள்ள எஸ்.யு.வி. ரக கார் ஒன்றை வெளியிட இருப்பதாக கூறப்படுகிறது.
இந்தியாவில் ஹூன்டாய் விற்பனை மற்றும் சர்வீஸ் மையங்களின் எண்ணிக்கையை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்சமயம் வரை நாடு முழுக்க 2200க்கும் அதிகமான விற்பனை மற்றும் சர்வீஸ் மையங்களும், 422 ஊரக பகுதிகளில் மையங்களை இயக்கி வருகிறது.
Next Story






