என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாருதி சுசுகி செலரியோ கிராஸ் ஹேட்ச்பேக் விரைவில் வெளியாகும் என தகவல்
    X

    மாருதி சுசுகி செலரியோ கிராஸ் ஹேட்ச்பேக் விரைவில் வெளியாகும் என தகவல்

    மாருதி சுசுகி நிறுவனத்தின் செலரியோ கிராஸ் ஹேட்ச்பேக் மாடல் விரைவில் இந்தியாவில் வெளியிடப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. புதிய மாடல் சார்ந்து வெளியாகியுள்ள முழு தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.
    புதுடெல்லி:

    மாருதி சுசுகியின் செலரியோ கிராஸ்ஓவர் போன்ற வடிவமைப்பை பெற இருக்கிறது. செலரியோ X கிராஸ் ஹேட்ச்பேக் பதிப்பில் விரைவில் வெளியிடப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

    புதிய செலரியோ கிராஸ் அக்டோபர் 4-ம் தேதி வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மாருதி சுசுகி செலரியோ இந்தியாவில் அதிகம் விற்பனையாகி வருகிறது. மாருதி கார்களில் AMT அல்லது AGS (ஆட்டோ கியர் ஷிஃப்ட்) வசதி கொண்ட முதல் மாடல் ஆகும். இத்துடன் புதிய மாடலில் 2-சிலிண்டர் டீசல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது.

    ஹூன்டாய் i20 ஆக்டிவ், ஃபியாட் அவென்ச்சுரா மற்றும் டொயோட்டா எடியோஸ் என இந்தயாவில் கிடைக்கும் கிராஸ் ஹேட்ச்பேக் மாடல்களின் விலை செலரியோ X மாடலை விட விலை அதிகம் ஆகும். புதிய செலரியோ X கிராஸ்-ஹேட்ச் மாடலின் பக்கவாட்டு, வீல் ஆர்ச் உள்ளிட்டவற்றில் பிளாஸ்டிக் கிளாடிங் செய்யப்பட்டுள்ளன.



    இத்துடன் புதிய பம்ப்பர்கள், கருப்பு நிறத்திலான பிளாஸ்டிக் கிளாடிங், பம்ப்பரை சுற்றி சில்வர் அக்சென்ட் செய்யப்பட்டுள்ளது. செலரியோ X மாடலில் புதிய வீல்களும் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. புதிய செலரியோ மாடலில் மெக்கானிக்கல் அப்கிரேடுகள் செய்யப்படாது என்றாலும், புதிய டையர் மற்றும் வெளிப்புற தோற்றம் உள்ளிட்டவை வாடிக்கையாளர்களை கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    பண்டிகை காலத்தில் வெளியாக இருக்கும் புதிய செலரியோ மாடல் ஸ்டான்டர்டு மாடலை போன்றே செலரியோ எக்ஸ் மாடலும் விநியோகஸ்தர்கள் மூலம் விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×