என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தி.மு.க.வுக்கு வாக்களித்தால் மக்களின் அமைதி போய்விடும் - அன்புமணி ராமதாஸ்
Byமாலை மலர்31 March 2021 2:30 AM GMT (Updated: 31 March 2021 2:30 AM GMT)
தி.மு.க.வுக்கு வாக்களித்தால் மக்களின் அமைதி போய்விடும் என்று பண்ருட்டி தேர்தல் பிரசாரத்தில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. பேசினார்.
பண்ருட்டி:
பண்ருட்டி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் இரா.ராஜேந்திரனை ஆதரித்து, பா.ம.க. இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. பண்ருட்டியில் பேசியதாவது:-
நம்முடைய வெற்றி வேட்பாளர் சொரத்தூர் ராஜேந்திரனை, இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுமாறு உங்கள் எல்லோரையும் கேட்டுக்கொள்கிறேன். தமிழகத்தில் 234 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. இதில் மோசமான வேட்பாளர் இந்த தொகுதியில் நிற்பவர் தான். வியாபாரம் நன்றாக இருக்கவேண்டும் என்றால், உங்கள் வீட்டுப் பெண்கள் எல்லோரும் நிம்மதியாக இருக்கவேண்டும் என்றால், இந்த நகரம் நன்றாக வளரவேண்டும் என்றால் ராஜேந்திரனை இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச்செய்யவேண்டும்.
தப்பித்தவறி நீங்கள் தி.மு.க.வுக்கு வாக்களித்தால் அவ்வளவுதான், உங்கள் அமைதி எல்லாம் போய்விடும். வணிகர்கள், வியாபாரம் செய்பவர்கள் எல்லோரும் சிந்திக்கவேண்டும். உங்களுடைய குடும்பம், உங்கள் வியாபாரம், உங்களுடைய கடை உங்களுடைய எதிர்காலம், உங்களுடைய சொத்து, வீடு எல்லாமே காணாமல் போய்விடும். அதனால் தி.மு.க.வுக்கு வாக்களிக்க வேண்டாம்.
நானும், டாக்டர் ராமதாசும் மக்களுக்கு சேவை செய்வதற்காகவே வந்துள்ளோம். அரசியல் என்பது புனிதமான சேவை. அதற்காகத்தான் நாங்கள் வந்திருக்கிறோம். நீங்கள் படிக்கணும், வேலைக்கு போகணும், முன்னேறனும் என்பதுதான் என்னுடைய நோக்கம். அதற்காகத்தான் நான் வந்துள்ளேன். இந்த மாவட்டம் பிரிக்கப்படுவதற்கு முன்பு தென்னாற்காடு மாவட்டமாக இருந்தது. அதுதான் என்னுடைய மாவட்டமும் ஆகும். இங்கு இருக்கும் என்னுடைய எல்லா தம்பிகளும் நன்றாக இருக்கவேண்டும். அவர்கள் மீது ஒரு வழக்கு கூட பதிவு செய்யப்படக்கூடாது.
எல்லோரும் படித்து வேலைக்கு செல்லவேண்டும். வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு டாக்டர் ராமதாஸ் பெற்றுத் தந்திருக்கிறார். அதை கொடுத்தது நம்முடைய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி. எனவே உங்கள் மீது ஏதேனும் வழக்கு வந்தால், உங்களுக்கு அதில் பணி கிடைக்காமல் போய்விடும். பணியில் சேர முடியாது. படிக்க முடியாது. ஆகையால் என்னுடைய நோக்கம் இந்த மாவட்டம் அமைதியாக இருக்கவேண்டும். வளர்ச்சி பெறவேண்டும். நீங்கள் நன்றாக இருக்கவேண்டும். உங்கள் குடும்பம் நன்றாக இருக்கவேண்டும். எனவே அ.தி.மு.க. வேட்பாளர் ராஜேந்திரனை வெற்றிப் பெறச்செய்யுங்கள் என்று உங்களை கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X