என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
3 தொகுதிகள் தராவிட்டால் தனித்து போட்டி- பாமக மாநில அமைப்பாளர் தன்ராஜ் தகவல்
புதுச்சேரி:
புதுச்சேரியில் பாரதீய ஜனதா, என்.ஆர். காங்கிரஸ், அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. இடம் பெற்று உள்ளது.
ஆனால் கூட்டணியில் பா.ம.க.வுக்கு தொகுதி ஒதுக்கவில்லை. இதனால் கடந்த 3 நாட்களுக்கு முன் பா.ம.க. செயற்குழு கூடி புதுச்சேரியில் தனித்து போட்டியிட முடிவு செய்து தீர்மானம் நிறைவேற்றினர்.
முதற்கட்டமாக 15 தொகுதியில் போட்டியிடும் பா.ம.க. வேட்பாளர் பட்டியலையும் பா.ம.க. மாநில அமைப்பாளர் தன்ராஜ் தயாரித்து கட்சி மேலிடத்துக்கு அனுப்பி உள்ளார்.
இந்த நிலையில் பாரதீய ஜனதா மேலிட பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா, முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோரை பா.ம.க. மாநில அமைப்பாளர் தன்ராஜ் சந்தித்து பேசினார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
புதுவையில் பா.ம.க. வலுவான கட்சி. தனித்து போட்டியிட்டால் வெற்றி பெற முடியாது. ஆனால் தொகுதிக்கு 2 ஆயிரம் ஓட்டுகள் பிரியும். இதனை பாரதீய ஜனதா- என்.ஆர் . காங்கிரஸ் புரிந்து கொள்ள வேண்டும்.
புதுவையில் 4 தொகுதிகள் கேட்டு கடைசியாக 3 தொகுதி கேட்டோம். தொகுதி தரவில்லை என்றால் தனித்து போட்டியிடுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிலையில் என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமியை பா.ம.க. மாநில அமைப்பாளர் தன்ராஜ் சந்தித்து பேசினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்