என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பெட்ரோல் மீதான வரி லிட்டருக்கு 3 ரூபாய் குறைப்பு -நிதியமைச்சர் அறிவிப்பு
Byமாலை மலர்13 Aug 2021 7:42 AM GMT (Updated: 13 Aug 2021 7:42 AM GMT)
பெட்ரோல் வரி குறைப்பால் அரசுக்கு 1,160 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படும் என நிதியமைச்சர் தெரிவித்தார்.
சென்னை:
தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசியதாவது:-
ஏழை, எளிய உழைக்கும் வர்க்க மக்கள் பெட்ரோல் விலையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பெட்ரோல் விலை உயர்வுக்கு மத்திய அரசு தான் முழுமையாக பொறுப்பேற்க வேண்டும்.
பெட்ரோல் மீது விதிக்கப்படும் வரி லிட்டருக்கு ரூ.3 அளவுக்கு குறைக்கப்படும். பெட்ரோல் விலை உயர்வால் பாதிக்கப்படும் ஏழை, நடுத்தர வர்க்கத்தின் வலியை உணர்ந்து வரி குறைப்பு செய்யப்படுகிறது. பெட்ரோல் வரி குறைப்பால் அரசுக்கு 1,160 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படும்.
போக்குவரத்துக் கழகங்களுக்கு டீசல் மானியமாக ரூ.750 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். புதிதாக பேருந்துகள் வாங்க ரூ.623.59 கோடி, மகளிர் இலவச பயணத்திற்கு ரூ.703 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
நெடுஞ்சாலைத்துறைக்கு ரூ.17,899.17 கோடி ஒதுக்கப்படுகிறது. அடுத்த 10 ஆண்டுகளில் மாநில நெடுஞ்சாலைகளை மாவட்ட தலைமையகத்துடன் இணைக்க 2,200 கி.மீ.க்கு 4 வழிச்சாலைகள் அமைக்கப்படும். சென்னையில் 3 இடங்களில் புதிய மேம்பாலங்கள் கட்ட ரூ.335 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X