என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
ஊழல் புகாரில் சிக்கி உள்ள பல்கலைக் கழகங்களுக்கு கவர்னர் நேரில் சென்று ஆய்வு நடத்த வேண்டும் - ராமதாஸ்
தர்மபுரி:
பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தர்மபுரியில் நிரூபர்களிடம் கூறியதாவது:-
அண்ணா பல்கலைக் கழகத்தில் தேர்வு விடைத்தாள்களை மறு மதிப்பீடு செய்வதில் மிகப்பெரிய அளவில் ஊழல் நடந்துள்ளது. கடந்த 7 ஆண்டுகளாக 26 லட்சம் பேர் தங்களது விடைத்தாள்களை மறுமதிப்பீடு கோரி விண்ணப்பித்துள்ளனர். இதில் 20 லட்சம் பேர் தேர்வாகி உள்ளனர்.
சாதாரணமாக தேர்வு எழுதுபவர்களில் 50 சதவீதம் பேர் தேர்ச்சி பெறுவர். மறுமதிப்பீட்டில் 76 சதவீதம் வரை தேர்ச்சி பெற்றுள்ளனர். தோல்வி அடைந்தவர்கள் தேர்ச்சி பெறுவது நம்பும்படியாக இல்லை.
தற்போது தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலராக இருந்த உமா, துணை வேந்தர் பதவி பெற முயன்றதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். மேலும் இந்த ஊழல் புகாரைத் தொடர்ந்து அத்துறையின் அமைச்சர் பதவி விலக வேண்டும். உயர் கல்வித்துறை செயலரை இடமாற்றம் செய்து, விசாரணை நடத்த வேண்டும்.
தமிழகத்தில் உள்ள 21 பல்கலைக்கழகங்களில் 20 பல்கலைக்கழகங்களுக்கு ஆளுநர் வேந்தராக உள்ளார்.
இசைப் பல்கலைக்கு மட்டும் முதல்வர் வேந்தராக உளார். தற்போது இந்த 20 பல்கலைக்கழகங்களும் ஊழல் புகாரில் சிக்கி உள்ளன. இது தொடர்பாக ஆளுநரிடம் புகார்கள் அளிக்கப்பட்டும், நடவடிக்கை எடுக்கப்பட வில்லை.
பல்வேறு மாவட்டங்களுக்குச் சென்று ஆய்வு செய்யும் ஆளுநர், பல்கலைகழகங்களுக்கும் சென்று ஆய்வு நடத்த வேண்டும். பல்கலைக் கழக ஊழல் தொடர்பாக விரைவில் ஆளுநரிடம் அன்புமணி மனு அளிக்க உள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதான நடந்த பா.ம.க. பொதுக்குழு கூட்டத்தில் டாக்டர் ராமதாஸ் பேசியதாவது:-
தமிழகத்தில் பா.ம.க.வால் மட்டுமே மக்கள் விரும்பக்கூடிய ஊழலற்ற சிறப்பான ஆட்சியை தர முடியும். டாக்டர் அன்புமணி ராமதாஸ் முதல்-அமைச்சராக வர வேண்டும் என்று இளைஞர்கள், படித்தவர்கள் விரும்புகிறார்கள்.
பாராளுமன்ற, சட்டமன்ற தேர்தல் என்று எந்த தேர்தல் வந்தாலும் தர்மபுரி மாவட்டத்தில் பா.ம.க.வினர் மற்ற கட்சிகளை டெபாசிட் இழக்க செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார். #Ramadoss #RevaluationScam #AnnaUniversityRaid
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்