search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பா.ஜ.க. கூட்டணிக்கு யாரையும் அழைக்கவில்லை- தமிழிசை சவுந்தரராஜன்
    X

    பா.ஜ.க. கூட்டணிக்கு யாரையும் அழைக்கவில்லை- தமிழிசை சவுந்தரராஜன்

    பா.ஜ.க. கூட்டணிக்கு யாரையும் இதுவரை அழைக்கவில்லை என்று மதுரை விமான நிலையத்தில் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். #BJP #TamilisaiSoundararajan
    அவனியாபுரம்:

    தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மதுரை விமான நிலையத்தில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஜி.எஸ்.டி. வரியை குறைக்க வேண்டும் என்ற பொதுமக்களின் கோரிக்கையை கடந்த 6 மாதமாக மத்திய அரசிடம் வலியுறுத்தினோம். அதில் எந்தெந்த பொருட்களுக்கு வரிகள் குறைக்க வேண்டும் என்று ஆலோசனைகள் நடத்தப்பட்டு சில பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரி குறைக்கப்பட்டுள்ளது.

    ஜி.எஸ்.டி. வரி வசூலிப்பதில் தமிழகம் 4-வது இடத்தில் உள்ளது. இதனால் தமிழக மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

    பிரதமர் மோடி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்தபோது வாக்குறுதி அளித்தபடி தற்போது ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கியுள்ளார். இதனால் அந்த நாட்டு மக்களின் பாராட்டை பெற்றிருக்கிறார். இதில் எதிர்மறைகள் இருந்தால் அதை எதிர்கொள்ள தயாராக உள்ளோம்.


    மதுரைக்கு எய்ம்ஸ் மருத்துவமனை ஒன்றே போதும். அது மதுரை மக்களின் பாராட்டை பெறுவதற்கு போதுமானதாகும்.

    அமித் ஷா ஆலோசனையின் பேரில் மதுரையில் இன்று பா.ஜ.க. மகளிர் மாநாடு நடத்தப்படுகிறது. இதில் சென்னை முதல் குமரி வரையிலான நிர்வாகிகள், மகளிர் அணியினர் திரளாக கலந்து கொள்கிறார்கள். இந்த மாநாட்டால் பா.ஜ.க.வின் பலம் உயரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    டி.டி.வி. தினகரன் பா.ஜ.க.வுடன் கூட்டணி சேரமாட்டோம் என்று கூறியிருக்கிறாரே? என்று கேட்டதற்கு, தமிழகத்தில் தேர்தல் வரும் நேரத்தில் கூட்டணி பற்றி தெரிவிக்கப்படும். பா.ஜ.க. ஊழலற்ற ஆட்சியை தருவது என்ற கொள்கையுடைய கட்சியாகும். எங்கள் கூட்டணிக்கு யாரையும் இதுவரை அழைக்கவில்லை என்று தமிழிசை சவுந்தரராஜன் பதில் அளித்தார். #BJP #TamilisaiSoundararajan
    Next Story
    ×