search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்ல வளாகத்தில் ரூ.57 கோடியில் புதிய விருந்தினர் இல்லம்- ஓ.பன்னீர்செல்வம்
    X

    டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்ல வளாகத்தில் ரூ.57 கோடியில் புதிய விருந்தினர் இல்லம்- ஓ.பன்னீர்செல்வம்

    டெல்லியில் உள்ள வைகை தமிழ்நாடு இல்ல வளாகத்தில் ரூ.57 கோடி செலவில் புதிய விருந்தினர் இல்லம் கட்டப்படும் என சட்டசபையில் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். #OPanneerselvam #TNAssembly
    சென்னை:

    சட்டசபையில் பொதுத்துறை தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்டு துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:-

    டெல்லியில் உள்ள வைகை தமிழ்நாடு இல்ல வளாகத்தில் ரூ.57 கோடி செலவில் புதிய விருந்தினர் இல்லம் கட்டப்படும். தற்போதுள்ள பிரதான விருந்தினர் இல்ல கட்டிடம் ரூ.2½ கோடி செலவில் மறுசீரமைப்பு பணிகள் செய்யப்படும்.

    தலைமை செயலகத்தில் செயல்பட்டு வரும் நாமக்கல் கவிஞர் மாளிகையில் பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில் ரூ.90 லட்சம் செலவில் நவீன கண்காணிப்பு கேமராக்கள் நிறுவப்படும்.

    தாயகம் திரும்பியோர் பயன்பெறும் வகையில் முதல்- அமைச்சரின் சூரிய மின் சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் ஆயிரம் வீடுகள், தாயகம் திரும்பியோருக்கு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை மூலம் ஒதுக்கீடு செய்யப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #OPanneerselvam #TNAssembly
    Next Story
    ×