என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
எதற்கெடுத்தாலும் பா.ஜனதா மீது குற்றம் சுமத்துவதா?- வானதி சீனிவாசன்
Byமாலை மலர்15 Jun 2018 9:19 AM GMT (Updated: 15 Jun 2018 9:19 AM GMT)
18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்புடன் பா.ஜ.க.வை தொடர்பு படுத்தி பேசுவதற்கு வானதி சீனிவாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஈரோடு:
பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் இன்று ஈரோட்டில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
பா.ஜனதாவின் 4 ஆண்டு சாதனை மிகவும் மகத்தானது. பல்வேறு திட்டங்களை மத்திய அரசு நிறைவேற்றி உள்ளது. விவசாய முன்னேற்றத்துக்கான திட்டங்கள், பெண்கள் முன்னேற்றத்துக்கான திட்டங்கள் இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.
மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்து உள்ளது. தமிழ்நாட்டில் இதற்கான பிரதிநிதிகள் குழு அமைக்கப்பட்டு விட்டது. ஆனால் கர்நாடகாவினர் பிரதிநிதிகள் குழு அமைக்கவில்லை. காவிரி மேலாண்மை வாரியம் அமைத்த பிறகு தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் ஏன் வாயை திறக்கவில்லை?
காவிரியில் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறக்க மாட்டோம் என்று கூறிதான் குமாரசாமி கர்நாடகாவில் ஆட்சிக்கு வந்திருக்கிறார். இவருக்கு தான் இங்குள்ளவர்கள் வாழ்த்துக்களை கூறி உள்ளனர்.
தமிழ்நாட்டில் 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் நீதிபதிகள் தீர்ப்பு கூறி உள்ளனர். இதற்கும் பா.ஜனதாவுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை.
ஆனால் இதற்கும் பாரதிய ஜனதாதான் காரணம் என்று கூறுகிறார்கள். இப்படி எதற்கெடுத்தாலும் பாரதிய ஜனதாவை குற்றம் சுமத்துவது எந்த வகையில் நியாயம்? நீதிபதிகள் தீர்ப்பு கூறியதற்கு பா.ஜனதாவை குறை சொல்வது ஏன்?
நடிகர் எஸ்.வி.சேகரை கைது செய்யாதது ஏன்? என என்னிடம் கேட்பது தவறு. அவர் எங்கள் கட்சியில் எந்த பொறுப்பிலும் இல்லை. அவர் ஏன் கைது செய்யப்படவில்லை என்பதை மாநில அரசிடம் கேளுங்கள்.
இவ்வாறு வானதி சீனிவாசன் கூறினார். #BJP #VanathiSrinivasan
பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் இன்று ஈரோட்டில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
பா.ஜனதாவின் 4 ஆண்டு சாதனை மிகவும் மகத்தானது. பல்வேறு திட்டங்களை மத்திய அரசு நிறைவேற்றி உள்ளது. விவசாய முன்னேற்றத்துக்கான திட்டங்கள், பெண்கள் முன்னேற்றத்துக்கான திட்டங்கள் இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.
மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்து உள்ளது. தமிழ்நாட்டில் இதற்கான பிரதிநிதிகள் குழு அமைக்கப்பட்டு விட்டது. ஆனால் கர்நாடகாவினர் பிரதிநிதிகள் குழு அமைக்கவில்லை. காவிரி மேலாண்மை வாரியம் அமைத்த பிறகு தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் ஏன் வாயை திறக்கவில்லை?
காவிரியில் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறக்க மாட்டோம் என்று கூறிதான் குமாரசாமி கர்நாடகாவில் ஆட்சிக்கு வந்திருக்கிறார். இவருக்கு தான் இங்குள்ளவர்கள் வாழ்த்துக்களை கூறி உள்ளனர்.
மத்திய அரசு திட்டங்களில் முக்கியமானது கருப்பு பணம் ஒழிப்பு. ஏகப்பட்ட கருப்பு பணம் வெளியே கொண்டு வரப்பட்டுள்ளது. இன்னொரு மகத்தான சாதனை ஆதார் இணைப்பு திட்டம். சாதாரண மக்களுக்கு கூட மானிய தொகை கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
ஆனால் இதற்கும் பாரதிய ஜனதாதான் காரணம் என்று கூறுகிறார்கள். இப்படி எதற்கெடுத்தாலும் பாரதிய ஜனதாவை குற்றம் சுமத்துவது எந்த வகையில் நியாயம்? நீதிபதிகள் தீர்ப்பு கூறியதற்கு பா.ஜனதாவை குறை சொல்வது ஏன்?
நடிகர் எஸ்.வி.சேகரை கைது செய்யாதது ஏன்? என என்னிடம் கேட்பது தவறு. அவர் எங்கள் கட்சியில் எந்த பொறுப்பிலும் இல்லை. அவர் ஏன் கைது செய்யப்படவில்லை என்பதை மாநில அரசிடம் கேளுங்கள்.
இவ்வாறு வானதி சீனிவாசன் கூறினார். #BJP #VanathiSrinivasan
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X