என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பிளாஸ்டிக் பொருட்கள் தடைக்கு பொது மக்கள் முழு ஒத்துழைப்பு தரவேண்டும்- ஜிகே வாசன்
Byமாலை மலர்7 Jun 2018 8:14 AM GMT (Updated: 7 Jun 2018 8:14 AM GMT)
பிளாஸ்டிக் பொருட்களின் தயாரிப்புக்கும், பயன்பாட்டிற்கும் முழு தடை விதிக்கவும், அதற்காக தமிழக மக்கள் முழு ஒத்துழைப்பு கொடுக்கவும் முன்வர வேண்டும் என்று ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். #GKVasan
சென்னை:
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி தமிழக அரசு வருகின்ற 2019 ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் பிளாஸ்டிக் பொருட்களின் உபயோகத்திற்கும், பயன்பாட்டிற்கும் தடை விதிப்பதாக அறிவித்திருக்கிறது. இது மிகவும் வரவேற்கத்தக்கது.
தற்போது அறிவிக்கப்பட்டுள்ள பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடை வெறும் அறிவிப்பாக மட்டுமே அமைந்துவிடாமல் கண்டிப்பாக செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டிய ஆரம்ப கட்ட நடவடிக்கைகளை உடனடியாக தொடங்க தமிழக அரசு முன்வர வேண்டும்.
எக்காரணத்திற்காகவும், எச்சூழலிலும், எக்காலத்திலும் தற்போது தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடைக்கு தடை ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில் ஆளும் ஆட்சியாளர்கள் உறுதியுடன் இருக்க வேண்டும்.
மேலும் தமிழக அரசு அறிவித்துள்ள பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடையை இனிவரும் காலம் தோறும் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டியது ஆளும் ஆட்சியாளர்கள் மற்றும் பொது மக்களின் கடமையாகும்.
எனவே வருங்கால சந்ததியினருக்கும், சுற்றுச்சூழலுக்கும், விலங்கினங்களுக்கும், பறவைகளுக்கும், கடல்வாழ் உயிரினங்களுக்கும் பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதற்கேற்ப பாதிப்பை ஏற்படுத்தும் அனைத்து விதமான பிளாஸ்டிக் பொருட்களின் தயாரிப்புக்கும், பயன்பாட்டிற்கும் முழு தடை விதிக்கவும், அதற்காக தமிழக மக்கள் முழு ஒத்துழைப்பு கொடுக்கவும் முன்வர வேண்டும் என்று த.மா.கா. சார்பில் வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார். #TamilMaanilaCongress #GKVasan
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி தமிழக அரசு வருகின்ற 2019 ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் பிளாஸ்டிக் பொருட்களின் உபயோகத்திற்கும், பயன்பாட்டிற்கும் தடை விதிப்பதாக அறிவித்திருக்கிறது. இது மிகவும் வரவேற்கத்தக்கது.
தற்போது அறிவிக்கப்பட்டுள்ள பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடை வெறும் அறிவிப்பாக மட்டுமே அமைந்துவிடாமல் கண்டிப்பாக செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டிய ஆரம்ப கட்ட நடவடிக்கைகளை உடனடியாக தொடங்க தமிழக அரசு முன்வர வேண்டும்.
எக்காரணத்திற்காகவும், எச்சூழலிலும், எக்காலத்திலும் தற்போது தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடைக்கு தடை ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில் ஆளும் ஆட்சியாளர்கள் உறுதியுடன் இருக்க வேண்டும்.
மேலும் தமிழக அரசு அறிவித்துள்ள பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடையை இனிவரும் காலம் தோறும் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டியது ஆளும் ஆட்சியாளர்கள் மற்றும் பொது மக்களின் கடமையாகும்.
எனவே வருங்கால சந்ததியினருக்கும், சுற்றுச்சூழலுக்கும், விலங்கினங்களுக்கும், பறவைகளுக்கும், கடல்வாழ் உயிரினங்களுக்கும் பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதற்கேற்ப பாதிப்பை ஏற்படுத்தும் அனைத்து விதமான பிளாஸ்டிக் பொருட்களின் தயாரிப்புக்கும், பயன்பாட்டிற்கும் முழு தடை விதிக்கவும், அதற்காக தமிழக மக்கள் முழு ஒத்துழைப்பு கொடுக்கவும் முன்வர வேண்டும் என்று த.மா.கா. சார்பில் வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார். #TamilMaanilaCongress #GKVasan
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X