search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தரவரிசை பட்டியலில் இடம் பெற்றால் மட்டுமே அரசு பள்ளிகளில் நியமனம்- அமைச்சர் செங்கோட்டையன்
    X

    தரவரிசை பட்டியலில் இடம் பெற்றால் மட்டுமே அரசு பள்ளிகளில் நியமனம்- அமைச்சர் செங்கோட்டையன்

    ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் தரவரிசை பட்டியலில் இடம் பெற்றால் மட்டுமே அரசு பள்ளிகளில் நியமனம் செய்யப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.#TNAssembly #TNMinister #Sengottaiyan
    சென்னை:

    சட்டசபையில் இன்று அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது:-

    ஆசிரியர் தகுதி தேர்வு என்பது ஆசிரியர்களாக நியமனம் பெறுவதற்கான ஒரு தகுதி தேர்வு மட்டுமே ஆகும். ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியராக பணிபுரிய இயலும். மேலும் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சுயநிதி பள்ளிகளில் ஆசிரியராக சேர்ந்து பணியாற்றவும் வாய்ப்பு உள்ளது.

    அரசு பள்ளிகளைப் பொறுத்தவரை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவது ஆண்டு தோறும் பள்ளிக் கல்வி மற்றும் தொடக்கக் கல்வித்துறையில் ஏற்படும் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் காலிப் பணியிட மதிப்பீட்டை கணக்கிட்டு அந்த காலிப் பணியிடங்களுக்கேற்ப, பணிநாடுநர்களது ஆசிரியர் தகுதி தேர்வு மதிப்பெண், தேர்வர்கள் பெற்ற கல்வித் தகுதிக்கான வெயிட்டேஜ் மதிப்பெண் மற்றும் இனசுழற்சி முறை அடிப்படையில் தரவரிசை நிர்ணயிக்கப்பட்டு அதன் அடிப்படையில் ஆசிரியர் நியமனம் மேற்கொள்ளப்படுகிறது.

    ஆசிரியர் தகுதி தேர்ச்சி பெற்றவர்கள் மீண்டும் அடுத்த முறை ஆசிரியர் நியமனத் தேர்வில் கலந்து கொண்டு காலிப் பணியிடங்களுக்கு ஏற்ற வகையில் தரவரிசைப் பட்டியலில் இடம் பெற்றால் மடடுமே அரசு பள்ளிகளில் நியமனம் செய்ய வாய்ப்பு உள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார். #TNAssembly #TNMinister #Sengottaiyan
    Next Story
    ×