என் மலர்
செய்திகள்

அ.தி.மு.க. இணைப்பில் பா.ஜனதா தலையீடு இல்லை: முரளிதரராவ் பேட்டி
ஆலந்தூர்:
தமிழக பாரதீய ஜனதா மேலிட பொறுப்பாளர் முரளிதரராவ் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷாவின் தமிழகம் வருகை தற்போது ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அவரது அலுவல் காரணமாக பயணம் ஒத்திவைக்கப்பட்டு இருக்கிறது. மீண்டும் அவரது தமிழகம் வருவதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
அமித்ஷா வருகையின் போது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வத்துடன் சந்திப்பு நடைபெறுமா? என்பது குறித்து தெரியவில்லை.

அ.தி.மு.க.வை பா.ஜனதா இயக்குவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுவதில் உண்மையில்லை. அது முட்டாள்தனமானது.
தமிழகத்தில் மட்டுமல்ல, எந்த ஒரு மாநிலத்திலும், மாநில கட்சிகளின் உள் பிரச்சினையில் பா.ஜனதா தலையிட வேண்டிய அவசியமில்லை.
அ.தி.மு.க.வின் இரு அணிகள் இணைவது என்பது அவர்களது தொண்டர்களின் விருப்பம். இணைந்தால் வெற்றியே. இல்லையென்றால் அவர்களுக்குள் சில பிரச்சினைகள் ஏற்படலாம். இதில் பாரதீய ஜனதா தலையீடு இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.






