search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    வாழ்வை வளமாக்கும் வழிமுறைகள்
    X
    வாழ்வை வளமாக்கும் வழிமுறைகள்

    வாழ்வை வளமாக்கும் வழிமுறைகள்

    அமைதி, மன்னிக்கும் பெருந்தன்மை, மன உறுதி ஆகிய நற்பண்புகளை வளர்த்துக்கொள்ளுங்கள். இதன் மூலம் வாழ்வில் வளரத்தொடங்குவீர்கள்.
    * அமைதி, மன்னிக்கும் பெருந்தன்மை, மன உறுதி ஆகிய நற்பண்புகளை வளர்த்துக்கொள்ளுங்கள். இதன் மூலம் வாழ்வில் வளரத்தொடங்குவீர்கள்.

    * தவறை எண்ணி வருந்தப்படாதீர்கள். நமக்கு வழிகாட்டும் தெய்வமாக அவை இருக்கிறது. எனவே தவறை பெரும் பேறாகக் கருதுங்கள்.

    * விதையின் சக்தி தான் மரமாக வளர்கிறது. அது போல ஒவ்வொருவரின் வாழ்வும் அவரவர் கொண்டிக்கும் மன ஆற்றலை பொறுத்தே அமைகிறது.

    * அன்பின் மூலமாக செய்யப்படும் ஒவ்வொரு செயலும் மகிழ்ச்சியை கொண்டு வந்தே தீரும்.

    * மன ஒருமையுடன் பணியாற்றுங்கள். ஆர்வத்துடன் ஈடுபட்டால் பணிகளை சிறப்பாக செய்ய முடியும்.

    * பெற்றோரை மகிழ்ச்சிப்படுத்தும் பிள்ளைகள் கடவுளையும் மகிழ்ச்சி அடைய செய்கிறார்கள்.

    * அடுத்தவர் கருத்தை கண்மூடித்தனமாக பின்பற்ற வேண்டாம். அனைத்தையும் ஆராய்ந்து பாருங்கள். அதில் உங்களுக்கு திருப்தி இருந்தால் பின்பற்றலாம். இல்லையெனில் உங்களது கருத்தில் உறுதியாக இருங்கள்.

    * எந்த வேலையையும் உங்களது விரும்பத்துக்கு ஏற்றதாக மாற்றிக்கொள்ளுங்கள்.

    * இடைவிடாமல் பணியாற்றுங்கள். எந்த பணிக்கும் அடிமையாகி விடாதீர்கள்.

    * பாமரன் பண்புள்ளவனாகவும், பண்புள்ளவன் தெய்வாகவும் உயரவே ஆன்மிகம் வழிகாட்டுகிறது.

    * வெற்றியோ, தோல்வியோ அதை விருப்பத்துடன் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

    இவைகள்தான் வாழ்க்கையை வளமாக்கும் வழிமுறைகள்.
    Next Story
    ×