என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
இரத்த சோகையால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிகளின் நிலை என்ன?
Byமாலை மலர்5 March 2020 4:05 AM GMT (Updated: 5 March 2020 4:05 AM GMT)
44.4% கர்ப்பிணி பெண்கள் இரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த இரத்த சோகையால் கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் என்னவென்று அறிந்து கொள்ளலாம்.
தமிழ்நாட்டில் இரத்த சோகையால் பாதிக்கப்பட்ட பெண்களின் சதவிகிதம் 55.1%. அதுபோல, 44.4% கர்ப்பிணி பெண்கள் (Anaemia in Pregnancy) இரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த இரத்த சோகை ஏன் இவ்வளவு பேரை பாதிக்கிறது? எதனால் இந்த பிரச்சனை வருகிறது? என்று பார்க்கலாம்.
முதலில் ஹீமோகுளோபின் பற்றித் தெரிந்தால் ரத்தசோகை பற்றிப் புரிந்து கொள்ள முடியும். ஹீமோகுளோபின் (Hemoglobin) என்பது புரதம் (Protein), சிவப்பு ரத்த அணுக்களில் இந்த ஹீமோகுளோபின் எனும் புரதம் இருக்கும்.நுரையீரலிலிருந்து ஆக்ஸிஜனை உடலில் உள்ள அனைத்து திசுக்களுக்கும் கொண்டு செல்லும். சிவப்பு ரத்த அணுக்களின் தோற்றத்தை சரியாக பராமரிப்பதற்கும் ஹீமோகுளோபின் முக்கியம்.
இரத்தத்தில் ஹீமோகுளோபின் என்ற புரதத்தின் அளவு, சிவப்பு ரத்த அணுக்களில் சரியாக இல்லையென்றாலோ குறைவாக இருந்தாலோ, உடலுக்குத் தேவையான அளவு ஆக்சிஜனை இரத்த சிவப்பு அணுக்களால் கொண்டு செல்ல முடியாது. இந்த பிரச்னையைதான் ‘இரத்த சோகை நோய்’ என்கிறார்கள்.
இரத்த சோகையால் ஏற்படும் பாதிப்புகள்
பிரசவத்தின்போது ஏற்படும் சிக்கல்களாலும் ரத்த இழப்பாலும் பெண்களின் இறப்பு விகிதம் அதிகரிக்கிறது. அதற்கு காரணம் இரத்த சோகை.
மரபியல் வழியாகத் தாய் குள்ளமாக இருப்பதாலும் இரும்புச்சத்து குறைபாட்டால் இரத்த சோகை ஏற்பட்டு தாய் பிரசவத்தின் போது இறக்கும் அபாயம் (Maternity Death) அதிகரிக்கிறது. இந்த பிரச்னைகளால் ஏற்படும் இறப்பு விகிதம் 20%.
இரத்த சோகையால் பாதித்த தாயின் கரு பலவீனமாக இருக்கும். அதனால் அந்த தாய் குறை பிரசவம் (Early delivery) அல்லது குறைந்த எடையுள்ள குழந்தையை (under weight babies) பெற்றெடுப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.
இரத்த சோகை உள்ள தாய்மார்களுக்கு பிறக்கும் குழந்தைகள், ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளாக இருக்கவும் நோய்கள், தொற்றுக்கள் வருவதுமான பிரச்னைகள் அதிகமாக இருக்கும்.
இரும்பு சத்து குறைபாடு (Iron deficiency) காரணமாக ஏற்படும் உடல் ரீதியான மற்றும் அறிவு ரீதியான இழப்புகளை ஒட்டு மொத்தமாக கணக்கிட்டால் அது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.05%.
வளரும் நாடுகளில் இரும்பு சத்து குறைவு, அயோடின் குறைபாடு (Iodine deficiency) மற்றும் விட்டமின் ஏ குறைபாடு (Vitamin A deficiency) ஆகியவற்றை சேர்த்து கணக்கிட்டால் அவற்றின் பொருளாதார செலவு உள்நாட்டு உற்பத்தியில் 5% அளவு இருக்கும் என உலக வங்கி கணக்கிட்டுள்ளது.
முதலில் ஹீமோகுளோபின் பற்றித் தெரிந்தால் ரத்தசோகை பற்றிப் புரிந்து கொள்ள முடியும். ஹீமோகுளோபின் (Hemoglobin) என்பது புரதம் (Protein), சிவப்பு ரத்த அணுக்களில் இந்த ஹீமோகுளோபின் எனும் புரதம் இருக்கும்.நுரையீரலிலிருந்து ஆக்ஸிஜனை உடலில் உள்ள அனைத்து திசுக்களுக்கும் கொண்டு செல்லும். சிவப்பு ரத்த அணுக்களின் தோற்றத்தை சரியாக பராமரிப்பதற்கும் ஹீமோகுளோபின் முக்கியம்.
இரத்தத்தில் ஹீமோகுளோபின் என்ற புரதத்தின் அளவு, சிவப்பு ரத்த அணுக்களில் சரியாக இல்லையென்றாலோ குறைவாக இருந்தாலோ, உடலுக்குத் தேவையான அளவு ஆக்சிஜனை இரத்த சிவப்பு அணுக்களால் கொண்டு செல்ல முடியாது. இந்த பிரச்னையைதான் ‘இரத்த சோகை நோய்’ என்கிறார்கள்.
இரத்த சோகையால் ஏற்படும் பாதிப்புகள்
பிரசவத்தின்போது ஏற்படும் சிக்கல்களாலும் ரத்த இழப்பாலும் பெண்களின் இறப்பு விகிதம் அதிகரிக்கிறது. அதற்கு காரணம் இரத்த சோகை.
மரபியல் வழியாகத் தாய் குள்ளமாக இருப்பதாலும் இரும்புச்சத்து குறைபாட்டால் இரத்த சோகை ஏற்பட்டு தாய் பிரசவத்தின் போது இறக்கும் அபாயம் (Maternity Death) அதிகரிக்கிறது. இந்த பிரச்னைகளால் ஏற்படும் இறப்பு விகிதம் 20%.
இரத்த சோகையால் பாதித்த தாயின் கரு பலவீனமாக இருக்கும். அதனால் அந்த தாய் குறை பிரசவம் (Early delivery) அல்லது குறைந்த எடையுள்ள குழந்தையை (under weight babies) பெற்றெடுப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.
இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் ஒரு யூனிட் அளவு அதிகரித்தால் குழந்தை இறக்கும் அபாயம் 24% சதவிகிதம் குறையும் என ஒரு ஆய்வு கூறுகிறது.
பல்வேறு ஆய்வுகளின் படி, ஒரு நாடு அல்லது ஒரு மாநிலம் இரத்தசோகையின் காரணமாக தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1-4% வரை இழக்கும்.
வளரும் நாடுகளில் இரும்பு சத்து குறைவு, அயோடின் குறைபாடு (Iodine deficiency) மற்றும் விட்டமின் ஏ குறைபாடு (Vitamin A deficiency) ஆகியவற்றை சேர்த்து கணக்கிட்டால் அவற்றின் பொருளாதார செலவு உள்நாட்டு உற்பத்தியில் 5% அளவு இருக்கும் என உலக வங்கி கணக்கிட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X