search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    கருவில் குழந்தைக்கு பெருமூளை வாதம் ஏற்பட காரணங்கள்
    X
    கருவில் குழந்தைக்கு பெருமூளை வாதம் ஏற்பட காரணங்கள்

    கர்ப்பகாலத்தில் கருவில் குழந்தைக்கு பெருமூளை வாதம் ஏற்பட காரணங்கள்

    கர்ப்பகாலத்தில் குழந்தை கருவில் வளரும் போது, பெருமூளை வாதம் ஏற்படலாம்.. அதற்கு காரணமாக விளங்குபவை குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    Cerebral palsy எனப்படும் பெருமூளை வாதம் குழந்தைகளுக்கு மூளையில் ஏதேனும் குறைபாடு அல்லது பிரச்சனை தோன்றினால் ஏற்படக் கூடியதாக உள்ளது. இந்த வாதம் ஏற்பட்டால், உடற்செயல்கள் பாதிக்கப்படும்; மேலும் பேசுவது, அன்றாட செயல்கள் செய்வது என அனைத்தும் பாதிக்கப்படும். இந்த நோய் குறித்து அறிந்து கொள்ளலாம்.

    பெருமூளை வாதம் ஏற்பட்டால், அது மூளை பிரச்சனைகளை பக்கவாதமாக மாற்றி விடுகிறது. இது தசைகளின் பலத்தை குறைத்து, அதன் இயக்கத்தை முடக்கிவிடுகிறது. இவை மூளையின் எந்த பாகத்தில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது என்பதை பொறுத்து அமைகிறது. உதாரணமாக, செரிப்பல்லம் பாதிக்கப்பட்டிருந்தால், நோயாளியின் எழுதும் திறன் பாதிக்கப்பட்டு, முடக்கப்பட்டு விடும். பெருமூளை வாதம் என்பது அனைத்து வகை அறிகுறிகளையும் கொண்டு, ஏற்படும்.

    இந்த நோய் ஏற்பட்டால் அனைத்து விளைவுகளும், எவ்வித ஒளிவு மறைவுமின்றி ஏற்படும். பெருமூளை வாதம் ஏற்படுவதற்கு காரணமாக அமையும் விஷயங்கள் குறித்து படித்தறிவோம்..

    கர்ப்பகாலம்...

    கர்ப்பகாலத்தில் குழந்தை கருவில் வளரும் போது, பெருமூளை வாதம் ஏற்படலாம்.. அதற்கு காரணமாக விளங்குபவை குறித்து அறியலாம்..

    * கதிரியக்கத்திற்கு கரு உள்ளாவது
    * கர்ப்பகாலத்தில் நோய்த் தொற்று ஏற்படுவது
    * ஹைபோக்சியா

    பிரசவத்திற்கு பின்..

    குழந்தை பிறக்கையில் பெருமூளை வாதம் ஏற்படலாம். இதற்கு காரணமாகும் விஷயங்கள்..

    * குழந்தை பிறக்கையில் மூளையில் ஏதேனும் பாதிப்பு ஏற்படுவது
    * குழந்தைக்கு ஏதேனும் நோய்த்தொற்று ஏற்படுவது
    * ஹைபோக்சியா

    மாற்றங்கள்..

    சில நேரங்களில் மரபணுக்களில் ஏற்படும் மாற்றங்களும் பெருமூளை வாதத்தை ஏற்படுத்துகின்றன.

    * பெருமூளை வாதம் மிக தீவிரமடையாது; ஏற்பட்ட நிலையிலேயே இருக்கும்.

    * பெருமூளை வாதத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளில் அடிவயிற்று பிரச்சனைகளும் ஏற்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது.

    அறிகுறிகள்:

    * தசைகளில் வலி

    * மெல்லுதல், விழுங்குதலின் போது வலித்தல்

    * தூக்கமின்மை

    * பார்த்தல், கேட்டலில் பிரச்சனை

    இந்த நோயை குணப்படுத்த இயலாது; சரியான சிகிச்சை, ஊக்கம் மூலம் குழந்தைகளை இந்த நோயை எதிர்த்து போராடி வாழச் செய்யலாம்..!
    Next Story
    ×