search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    நஞ்சுக்கொடி கருப்பை சுவற்றில் வளர்ந்திருந்தால் என்ன செய்வார்கள்?
    X
    நஞ்சுக்கொடி கருப்பை சுவற்றில் வளர்ந்திருந்தால் என்ன செய்வார்கள்?

    நஞ்சுக்கொடி கருப்பை சுவற்றில் வளர்ந்திருந்தால் என்ன செய்வார்கள்?

    கர்ப்பிணிகளுக்கு காணப்படும் பிரச்சனைகளுள் ஒன்று நஞ்சுக்கொடி கருப்பை சுவர் நோக்கி வளர்வதாகும். இந்த பிரச்சனையை பற்றி அறிந்து கொள்ளலாம்.
    பெண்கள் பிரசவ நிலையை எட்டும் வரை பல விசித்திரமான பிரச்சனைகளை எதிர்கொள்கிறார்கள். அப்படி கர்ப்பிணிகளுக்கு காணப்படும் பிரச்சனைகளுள் ஒன்று தான் இந்த நஞ்சுக்கொடி கருப்பை சுவர் நோக்கி வளர்வதாகும். இது மிகவும் ஆபத்தான ஒரு பிரச்சனையும் கூட... இதை பற்றிய ஒரு சில விஷயங்களை அறிந்து கொள்ளலாம்.

    பொதுவாக கருப்பை சுவருடன் இணைந்திருக்கும் நஞ்சுக்கொடியை குழந்தை பிறந்தவுடனே நம்மால் காண முடியும். இதனால் அதிகம் இரத்தம் வெளிப்படுவதையும் நீங்கள் கண்டிருக்கக்கூடும். ஒருவேளை நஞ்சுக்கொடி வளர்ந்து காணப்பட்டால் அப்போது மருத்துவர்கள் சிசேரியனுக்கு பரிந்துரை செய்வர். காரணம், இதனால் சுகப்பிரசவம் என்பது அவ்வளவு எளிதாக அமைவதல்ல என்பதாலே ஆகும்.

    இந்த பிரச்சனையை எந்த ஒரு அறிகுறிகளும் உணர்த்துவதில்லை என்றாலும், கர்ப்பிணிகளின் 3ஆவது மூன்று மாதத்தில் பிறப்புறுப்பிலிருந்து வெளியாகும் இரத்தம் கொண்டு தெரிந்துக்கொள்ள முடிகிறது. அதுபோல் அடிக்கடி எழுப்பப்படும் அல்ட்ரா சவுண்ட் மூலமும் இந்த பிரச்சனையை நாம் தெரிந்துக்கொள்ள முடிகிறது.

    உங்களுடைய மூன்றாவது 3 மாதத்தில் பிறப்புறுப்பிலிருந்து இரத்தம் வடிய, நீங்கள் கண்டிப்பாக ஆரோக்கிய வல்லுனரை அணுகி அறிவுரை பெற வேண்டியது கட்டாயமாகும்.

    நீங்கள் ஏற்கனவே செய்துக்கொண்ட சிசேரியன் வடு அல்லது மற்ற பிற கருப்பை அறுவை சிகிச்சை காரணமாக இந்த பிரச்சனை என்பது ஒரு கர்ப்பிணி பெண்ணுக்கு ஏற்படுகிறது. அதாவது கருப்பை சுவர் நோக்கி நஞ்சுக்கொடியானது நீண்ட தூரத்துக்கு வளர்ந்திருக்கும்.

    1. சிசேரியன் ஏற்கனவே செய்திருந்தால் இந்த பிரச்சனை ஏற்படக்கூடும்.

    2. உங்களுடைய நஞ்சுக்கொடி கருப்பையை முழுவதுமாகவோ அல்லது அரை நிலையிலோ சூழ்ந்திருக்கும் போது இந்த பிரச்சனை உருவாகலாம்.

    3. முப்பத்தைந்து வயது கடந்த பெண்களுக்கு இப்பிரச்சனை வரும்.

    4. இதற்கு முன்னாள் பிறப்பை நீங்கள் தந்திருந்தால் இப்பிரச்சனை வரலாம்.

    என்ன ஆபத்து?

    1. பிறப்புறுப்பிலிருந்து இரத்தம் அதிகம் வெளியேற தொடங்கும்.

    2. பிறக்கும் குழந்தை குறைப்பிரசவத்தில் பிறக்கவும் வாய்ப்பிருக்கிறது. 
    Next Story
    ×