என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
அழகுக் குறிப்புகள்
விவசாயிகளுக்கு சீராக கடன்: பொதுத்துறை வங்கிகளுக்கு நிர்மலா சீதாராமன் அறிவுறுத்தல்
- கிசான் கடன் அட்டை திட்டத்தை நிர்மலா சீதாராமன் மறு ஆய்வு செய்தார்.
- பிராந்திய கிராமப்புற வங்கிகளுக்கு தொழில்நுட்ப மேம்பாட்டுக்கு உதவுமாறும் கேட்டுக்கொண்டார்.
புதுடெல்லி :
கிசான் கடன் அட்டை வைத்திருக்கும் விவசாயிகளுக்கு சீராக கடன் வழங்குவதை உறுதி செய்யுமாறு பொதுத்துறை வங்கிகளுக்கு நிர்மலா சீதாராமன் அறிவுறுத்தினார். மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனுடனான பொதுத்துறை வங்கிகளின் தலைமை செயல் அதிகாரிகள் சந்திப்பு நேற்று டெல்லியில் நடந்தது. இந்த சந்திப்பில் மத்திய மீன்வளத்துறை மந்திரி பர்சோத்தம் ருபாலா, நிதித்துறை இணை மந்திரி பகவத் கரட் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் கிசான் கடன் அட்டை திட்டத்தை நிர்மலா சீதாராமன் மறு ஆய்வு செய்தார். அத்துடன் இந்த பிரிவினருக்கு நிறுவன கடன் எவ்வாறு வழங்க முடியும்? என்பது குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது. மேலும் மீன்பிடித்தல் மற்றும் கால்நடை பண்ணை தொழிலில் ஈடுபடுவோருக்கும் கிசான் கடன் அட்டை வழங்குவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் பேசிய நிர்மலா சீதாராமன், கிராமப்புற வருவாயை பெருக்கும் வகையில், கிசான் கடன் அட்டை வைத்திருக்கும் விவசாயிகளுக்கு சீராக கடன் வழங்குவதை உறுதி செய்யுமாறு பொதுத்துறை வங்கி தலைவர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும் பிராந்திய கிராமப்புற வங்கிகளுக்கு தொழில்நுட்ப மேம்பாட்டுக்கு உதவுமாறும் கேட்டுக்கொண்டார்.
விவசாய கடன் வழங்குவதில் முக்கிய பங்காற்றி வரும் இந்த வங்கிகளுக்கு பொதுத்துறை வங்கிகள்தான் நன்கொடையாளர்களாக செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. பிராந்திய கிராமப்புற வங்கிகள் பற்றிய மற்றொரு அமர்வில், டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டுக்கு நன்கொடை திரட்டி உதவ வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டதாக நிதித்துறை இணை மந்திரி பகவத் கரட் பின்னர் செய்தியாளர்களிடம் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்