search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    அனைத்து வகையான சரும பிரச்சனைகளையும் தீர்க்கும் சந்தனம்
    X
    அனைத்து வகையான சரும பிரச்சனைகளையும் தீர்க்கும் சந்தனம்

    அனைத்து வகையான சரும பிரச்சனைகளையும் தீர்க்கும் சந்தனம்

    சந்தனம் பல விதமான மருத்துவ நலன்களைக் கொண்டுள்ளது. பருக்கள், கரும்புள்ளிகள், கருவளையங்கள், போன்ற சருமப் பிரச்சனைகள் முதல் பல்வேறு சரும பிரச்சனைகளுக்கு தீர்வாக பயன்படுத்தப்படுகிறது.
    மாசு நிறைந்த நகர வாழ்க்கையில் பருக்கள், கரும்புள்ளிகள், கருவளையங்கள், போன்ற சருமப் பிரச்சனைகள் சாதாரணமாக அனைவருக்கும் வர ஆரம்பித்துவிட்டது. ஆயுர்வேதத்தில் சிறப்புவாய்ந்த, உடலுக்கு அழகு சேர்க்கும் பல நன்மைகளைக் கொண்டது சந்தனம். சந்தனம் இயற்கையானது, நம்பகமானது, பயன்த்தரக் கூடியது. நறுமணம் நிறைந்த சந்தன மரத்திலிருந்து பெறப்பட்ட பழுப்பு நிறப் பவுடராக இந்த சந்தனம் கிடைக்கும். சந்தன எண்ணெய் பல விதமான தோல் பிரச்சனைகளுக்கு தீர்வழிப்பதில் சிறந்து விளங்குகிறது. சந்தனம் பல விதமான மருத்துவ நலன்களைக் கொண்டுள்ளது. எனவே பல சரும பிரச்சனைகள் தீர்வாக பயன்படுத்தப்படுகிறது.

    இதோ உங்கள் சருமத்திற்கு பயன்தரும் சந்தனத்தின் பயன்கள்

    1. கருமையை நீக்க உதவுகிறது

    சூரியனின் தீங்கு விளைவிக்கும் கதிர்களில் இருந்து உங்களை காப்பாற்ற வேண்டியது அவசியம். சந்தனத்தில் உள்ள இயற்கை எண்ணெய்கள் சூரியனால் ஏற்படும் கருமையை அகற்ற உதவுகின்றன.

    2. அலர்ஜி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது

    அதன் அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் முகப்பரு அல்லது சூரியனின் கதிர்கள் காரணமாக ஏற்படும் எரியும் உணர்வைப் போக்க உதவுகிறது. சந்தன எண்ணெய் பூச்சிக் கடி அல்லது வேறு எந்த தோல் காயங்களுக்கும் சிகிச்சைக்காகப் பயன்படுத்தலாம்.

    3. சுருக்கத்தை போக்க பயன்படுகிறது

    சந்தனம் சருமத்தில் புரதங்களைக் கட்டுப்படுத்துகிறது, மேலும் உங்கள் தோலை அனைத்து வகை ஒரு பிரேக்அவுட், ஒவ்வாமை அல்லது சிராய்ப்புகளிலிருந்தும் பாதுகாக்கிறது. இது தோல் மென்மையான திசுக்களில் உள்ள சிறிய சுருக்கங்கள் மற்றும் துளைகளை இறுக்குகிறது. பலவிதமான ஃபேஸ் பக்ஸ், டோனர்களில், சந்தனம் முக்கிய பொருட்கள் ஒன்றாக பயன்படுத்தப்படுகின்றன.

     4. கிருமி நாசினியாக பயன்படுத்தப்படுகிறது

    சந்தனம், பருக்கள், முகப்பரு மற்றும் புண்கள் ஆகியவற்றைத் தடுக்கின்ற ஆண்டிசெப்டிக் பண்புகளைக் கொண்டுள்ளது. சருமத்தில் தூசி மற்றும் மாசுபடும் போது பாக்டீரியா வளர்ச்சியை ஏற்படுத்துகிறது. இது மேலும் தோல் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். உங்கள் முகத்தில் பாதிப்படைந்த பகுதியில் சந்தனத்தை பாலுடன் கலந்து அந்த கலவையை பயன்படுத்தினால் அது தோலை பாதுகாக்க உதவும்.
    Next Story
    ×