என் மலர்tooltip icon

    கிச்சன் கில்லாடிகள்

    குழந்தைகளுக்கு மிகவும் விரும்பமான கேழ்வரகு மிக்சர் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :  

    கேழ்வரகு - 200 கிராம்,
    மிளகாய்த் தூள் - சிறிதளவு,
    பொட்டுக்கடலை, வேர்க்கடலை, பொரித்த அவல் - தலா 50 கிராம்,
    உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

    செய்முறை:

    * கேழ்வரகை அரைத்து மாவாக்கிக்கொள்ள வேண்டும்.

    * இந்த மாவில் உப்பு, மிளகாய்த் தூள் சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு, கெட்டிப் பதத்தில் பிசைய வேண்டும்.

    * மாவை ஓமப்பொடி அச்சில் போட்டு, எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.

    * இதனுடன், பொட்டுக்கடலை, வேர்க்கடலை பொரித்த அவல் சேர்த்தால், சுவையான கேழ்வரகு மிக்சர் ரெடி!

    பலன்கள்:

    கேழ்வரகில் புரதம், கொழுப்பு, இரும்புச்சத்து, நார்ச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், கார்போஹைட்ரேட் போன்ற சத்துக்கள் உள்ளன. உடலுக்கு வலிமையைத் தரும்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான ஸ்நாக்ஸ் இது. அதை எப்படி எளிய முறையில் செய்யலாம் என்பதை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    மைதா - ஒரு கப்,
    எள் - ஒரு டீஸ்பூன்,
    எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு,
    வெண்ணெய் - ஒரு டீஸ்பூன்,
    உப்பு - தேவையான அளவு.

    செய்முறை :

    * மைதா மாவை ஆவியில் வேகவிடவும்.

    * வேக வைத்த மாவுடன் உப்பு, வெண்ணெய், எள் சேர்த்து சப்பாத்தி மாவு போல பிசையவும்.

    * பிசைந்த மாவை 30 நிமிடங்கள் மூடி வைத்த பின் மாவை சப்பாத்தி வடிவில் உருட்டி, விரும்பிய வடிவங்களில்(சிறிய வடிவில்) வெட்டி வைக்கவும்.

    * சூடான எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.

    * மைதா எள் பிஸ்கெட் ரெடி

    குறிப்பு :

    * எள் சேர்க்க விருப்பம் இல்லாதவர்கள் சேர்க்க வேண்டாம். எள்ளுக்கு பதிலாக சீரகம், ஓமம் சேர்த்து கொள்ளலாம். இனிப்பு விரும்புவர்கள் உப்புக்கு பதிலாக சர்க்கரை சேர்த்து செய்யலாம்.

    * காற்று புகாத டப்பாவில் போட்டு வைத்து ஒருவாரம் வரை உபயோகப்படுத்தலாம்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள். 

    வீட்டிலேயே எக் சிக்கன் ப்ரைடு ரைஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    வெங்காயம் - 3 /4 கப்
    எண்ணெய் - 2 1 /2 மேசைக்கரண்டி
    முட்டை - 2
    சோயா சாஸ் - கால் தேக்கரண்டி
    நல்லெண்ணெய் - கால் தேக்கரண்டி
    சிக்கன் எலும்பில்லாதது - 400 கிராம்
    கேரட் - 2
    பட்டாணி - அரை கப்
    வெங்காயத் தாள் - சிறிதளவு
    பாஸ்மதி அரிசி - 2 கப்

    செய்முறை :

    * அரிசியைக் கழுவி கடாயில் லேசாக, அரிசியின் ஈரப்பதம் வற்றும் வரை வறுத்து 1 கப் அரிசிக்கு 2 கப் தண்ணீர் ஊற்றி வேக வைத்து, ஆற வைத்துக் கொள்ளவும். குறைந்தது 4 - 6 மணி நேரம் வரை ஆற வைத்துக் கொள்ளவும்.

    * சிக்கனை எலும்பு இல்லாமல் பொடியாக நறுக்கி சிறிது உப்பு சேர்த்து வேக வைத்து கொள்ளவும்.

     * கேரட், வெங்காயத்தாள், வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * முட்டையை ஒரு கிண்ணத்தில் ஊற்றி லேசாக அடித்துக் கொள்ளவும்.

    * கடாயில் 1 மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி, பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து பிரவுன் கலராகும் வரை வதக்கிக் கொள்ளவும். வதக்கிய வெங்காயத்தை தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும்.

    * முட்டையுடன் நல்லெண்ணெய் மற்றும் சோயா சாஸ் கலந்து வைத்துக் கொள்ளவும்.

    * கலந்து வைத்துள்ள முட்டையைக் கடாயில் ஊற்றி லேசாக வதக்கி (முட்டை பொரியலுக்கு செய்வது போல) எடுத்துக் கொள்ளவும்.

    * கடாயில் 1 மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி, வேக வைத்துள்ள சிக்கன், கேரட், பட்டாணி மற்றும் வதக்கிய வெங்காயம் சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கிக் கொள்ளவும் .

    * இதனுடன் வேக வைத்து வைத்துள்ள சாதம், வெங்காயத்தாள் பொடியாக நறுக்கியது அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து கலந்து 3 நிமிடங்கள் வதக்கவும்.

    * இதனுடன் 2 மேசைக்கரண்டி சோயா சாஸ் மற்றும் பொரித்து வைத்துள்ள முட்டை சேர்த்துக் கலந்து 1 நிமிடம் வதக்கிப் பரிமாறவும்.

    * எக் சிக்கன் ப்ரைடு ரைஸ் ரெடி.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள். 
    மீல் மேக்கரில் விதவிதமாக சமைக்கலாம். இப்போது சுவையான மீல் மேக்கர் கிரேவி செய்வது எப்படி என்று பார்ப்போம்.
    தேவையான பொருட்கள் :

    மீல் மேக்கர் - 20 (எண்ணிக்கையில்)
    சின்ன வெங்காயம் - 15
    தக்காளி - 2
    தேங்காய் - கால் கப்
    இஞ்சி பூண்டு விழுது - தேவைக்கு
    மிளகாய் தூள் - தேவைக்கு
    பச்சை மிளகாய் - 3
    பட்டை - 3 துண்டு
    கிராம்பு - 4
    மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
    உப்பு - தேவைக்கு
    எண்ணெய் - தேவைக்கு

    செய்முறை :

    * முதலில் மீல் மேக்கர் முழ்கும் அளவு தண்ணீரை கொதிக்க வைத்து மீல் மேக்கரை அதில் 20 நிமிடம் ஊற வைக்க வேணடும்.
     
    * மிக்ஸியில் தக்காளி, வெங்காயத்தை தனித்தனியாக அரைத்து கொள்ளவும்.

    * தேங்காயை விழுதாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

    * வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு போட்டு தாளித்து இஞ்சி பூண்டு விழுதை போட்டு 2 நிமிடம் வதக்கவும்.

    * அதனுடன் வெங்காய விழுதை போட்டு 3 நிமிடம் வதக்கவும்.

    * வெங்காயம் வதங்கி நிறம் மாறியவுடன் அதில் தக்காளி விழுதையும் சேர்த்து மீண்டும் 3 நிமிடம் வதக்கவும்.

    * பச்சை மிளகாய் போட்டு வதக்கி விட்டு மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து மீண்டும் நன்றாக வதக்கவும்.

    * 3 நிமிடம் கழித்து தண்ணீரில் போட்டு வைத்துள்ள மீல் மேக்கரை நன்றாக தண்ணீரை பிழிந்து விட்டு இந்த கலவையில் போட்டு நன்கு பிரட்டி விடவும்.

    * அடுத்து அதில் தேங்காய் விழுது, கால் கப் தண்ணீர் ஊற்றி மூடி மிதமான தீயில் 10 நிமிடம் வேக வைக்கவும்.

    * மீல் மேக்கர் கிரேவி கெட்டியாக தண்ணீர் வற்றி ஓரங்களில் எண்ணெய் பிரிந்து வரும் போது கொத்தமல்லி, புதினாவை போட்டு கிளறி இறக்கவும்.

    * சுவையான மீல் மேக்கர் கிரேவி ரெடி.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள். 
    மிகவும் பிரபலமான ஒரு ரெசிபி தான் வடைகறி. இந்த வடைகறியை எளிமையான முறையில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கடலைப்பருப்பு - 1 கப்
    சோம்பு - 1 டீஸ்பூன்
    வரமிளகாய - 2
    உப்பு - தேவையான அளவு

    கிரேவி செய்ய :

    வெங்காயம் - 1
    தக்காளி - 2
    இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
    மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
    தனியா தூள் - 1 டீஸ்பூன்
    மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
    கொத்தமல்லி - சிறிது

    தாளிக்க  :

    எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
    பட்டை - 1
    கிராம்பு - 2
    பிரியாணி இலை - 1
    பச்சை மிளகாய் - 1
    கறிவேப்பிலை - சிறிது


    செய்முறை :

    * வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * தக்காளியை நீரில் போட்டு சிறிது நேரம் அடுப்பில் வைத்து கொதிக்க விட வேண்டும். பின் அதன் தோலை நீக்கிவிட்டு, அதனை மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும்.

    * கடலைப்பருப்பை நன்றாக கழுவி 2 மணிநேரம் தண்ணீரில் ஊறவைக்கவும். ஊற வைத்த கடலைப்பருப்பை நன்கு கழுவி, அதனை மிக்ஸியில் போட்டு, அத்துடன் வரமிளகாய், சோம்பு மற்றும் உப்பு சேர்த்து சேர்த்து, தண்ணீர் சேர்க்காமல் கொரகொரவென்று அரைத்துக் கொள்ள வேண்டும்.

    * அரைத்த மாவை சிறுசிறு வடைகளாக தட்டி, எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

    * பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பட்டை, கிராம்பு, பிரியாணி இலை, பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்த பின் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கி, அடுத்து வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

    * வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் அரைத்து வைத்துள்ள தக்காளியை ஊற்றி, மிளகாய் தூள், தனியா தூள், மஞ்சள் தூள் சேர்த்து கிளறி, 3/4 கப் தண்ணீர் ஊற்றி, கொதிக்க விட வேண்டும்.

    * பிறகு அதில் வடைகளை 4 துண்டுகளாக பிய்த்து போட்டு, மிதமான தீயில் 5 நிமிடம் நன்கு கொதிக்க விட்டு கொத்தமல்லி தூவி இறக்கினால் சுவையான வடைகறி ரெடி!!!

    * வடையை உதிர்த்து போட்டும் வடைகறி செய்யலாம். விருப்பப்பட்டால் தேங்காய் பால் சேர்த்து கொள்ளலாம்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு வாழைக்காய் சிப்ஸ் மிகவும் பிடிக்கும். வீட்டில் எளியமுறையில் வாழைக்காய் சிப்ஸ் எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    வாழைக்காய் - 3
    மிளகு - 4 தே.க
    உப்பு - தேவையான அளவு
    எண்ணெய் - பொரித்தெடுக்க

    செய்முறை :

    * வாழைக்காயின் மேல்தோலை நீக்கி அதனை மெலியதாக வட்ட வடிவில் (வாழைக்காய் சீவலில்) சீவி தண்ணீரில் போட்டு வைக்கவும்.

    * ஒரு தூய்மையான (வெள்ளைத்)துணியின் மீது இந்த துண்டுகளை பரப்பி சிறிது நேரம் உலற விடவும்.

    * மிளகை மிக்ஸியில் போட்டு கொஞ்சம் மிருதுவாக பொடித்துக்கொள்ளவும். இதனுடன் தேவையான உப்பு சேர்த்து தயாரக வைத்திருக்கவும்.

    * வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்த பின் வெட்டி வைத்த வாழைக்காய் துண்டுகளை ஒவ்வொன்றாக போட்டு பொரித்து எடுக்கவும். (எல்லாம் ஒரே சீராக ஒரு வகை மஞ்சள்/வெள்ளை நிறத்துக்கு மாறினதும்)

    * பொரித்தெடுத்த வாழைக்காயை சிப்ஸை ஒரு பாத்திரத்தில் போட்டு மேலே சிறிது உப்பு மிளகு கலவையை தூவி நன்றாக குலுக்கி எடுத்து காற்று போகாத ஒரு டப்பாவில் போட்டு வைக்கவும்.

    * இதே போல் எல்லா துண்டுகளையும் பொரித்து, உப்பு மிளகு கலந்து வைக்கவும்.

    * சுவையான வாழைக்காய் சிப்ஸ் ரெடி.

    * உருளைக்கிழங்கு, நேந்திரம் பழத்திலும் இந்த சிப்ஸை செய்யலாம்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள். 
    குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான உருளைக்கிழங்கு ஃப்ரெஞ்ச் ஆம்லெட்டை எளிமையான முறையில் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    முட்டை - 3
    உருளைகிழங்கு - 2
    வெங்காயம் - 1
    தக்காளி - 1
    பச்சைமிளகாய், கொத்தமல்லிதழை - சிறிதளவு
    மிளகு பொடி - ஒரு ஸ்பூன்
    மிளகாய்த்தூள் - கால் ஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு

    செய்முறை :

    * உருளைக்கிழங்கை வேகவைத்து பொடியாக நறுக்கி கொள்ளவும். அல்லம் ஒன்றும் பாதியாக மசித்து கொள்ளவும்.

    * தக்காளி, கொத்தமல்லி, ப.மிளகாய், வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * முட்டையை உப்பு, மிளகாய்தூள் சேர்த்து நன்றாக நுரை வரும்படி அடித்துக்கொள்ளவும்.

    * ஒரு நான்ஸ்டிக் பானில் சிறிது எண்ணெய் தடவி முட்டையை ஒரு லேயர் ஊற்றவும்.

    அதன் மேல் வெங்காயம், தக்காளி, உருளைக்கிழங்கு, கொத்தமல்லித்தழை, சிறிது மிளகுதூள் தூவி அதன் மேல் இன்னொரு லேயர் முட்டையை ஊற்றவும். மிதமான தீயில் மூடி போட்டு 3 நிமிடங்கள் வேகவிடவும். மறுபடியும் திருப்பி போட்டு 2 நிமிடம் மூடி வைக்கவும்.

    * இப்பொழுது பொன்னிற உருளைக்கிழங்கு ஃப்ரெஞ்ச் ஆம்லெட் நல்ல வாசனையோடு ரெடி.

    குறிப்பு :

    * உருளைக்கிழங்கை பொடியாக நறுக்கி மசாலா சேர்த்து எண்ணெயில் பொரித்தும் சேர்க்கலாம்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    மாலை வேளையில் சுக்கு காபியுடன் உருளைக்கிழங்கு சமோசா சாப்பிட மிகவும் அருமையாக இருக்கும். இப்போது இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    மைதா மாவு - 200 கிராம்
    உருளைக்கிழங்கு - 2
    வெங்காயம் - 2
    சீரகம் - ஒரு தேக்கரண்டி
    மிளகாய்த் தூள் - தேவைக்கேற்ப
    எண்ணெய் - தேவையான அளவு
    உப்பு - தேவையான அளவு

    செய்முறை :

    * உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் நீக்கி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

    * வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி வைக்கவும்.

    * வாணலியில் எண்ணெய் விட்டு சீரகம் தாளித்து, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

    * பிறகு உருளைக்கிழங்கைச் சேர்த்து மிளகாய்த் தூள் மற்றும் உப்பு சேர்த்து வதக்கி மசாலாவைத் தயார் செய்து வைக்கவும்.

    * மைதா மாவில் உப்பு சேர்த்து, தண்ணீர் விட்டு பிசைந்து, சப்பாத்திக்கு திரட்டுவது போல் திரட்டி அரை வட்டங்களாக வெட்டிக் கொள்ளவும்.



    * வெட்டிய துண்டில் ஒன்றை எடுத்து, அதன் ஒரு பாதி விளிம்பில் தண்ணீர் தொட்டுக் கொண்டு, மறுபாதி விளிம்பின் மேல் வைத்து ஒட்டி கூம்பு போல் செய்து கொள்ளவும். அதனுள்ளே தயாரித்த உருளைக்கிழங்கு மசாலா சிறிது வைத்து ஓரங்களில் தண்ணீர் தடவி ஒட்டி விடவும்.

    * இதே போல் மீதமுள்ள மாவிலும் மசாலாவை வைத்து சமோசா செய்து வைக்கவும்.

    * ஒரு அடிகனமாக கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் செய்து வைத்துள்ள சமோசாவை போட்டு பொரித்தெடுக்கவும்.

    * சுவையான உருளைக்கிழங்கு சமோசா தயார்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள். 
    சப்பாத்திக்கு பன்னீர் குருமா மிகவும் சுவையாக இருக்கும். இப்போது இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பன்னீர் - 300 கிராம்
    வெங்காயம் - 1
    தக்காளி - 1
    மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
    மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
    கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
    பிரஷ் க்ரீம் - 2 டேபிள் ஸ்பூன்
    கொத்தமல்லி - தேவையான அளவு
    உப்பு - தேவையான அளவு

    தாளிப்பதற்கு...

    எண்ணெய் - 3 டீஸ்பூன்
    பட்டை - 1/4 இன்ச்
    கிராம்பு - 2
    பிரியாணி இலை - 1

    அரைப்பதற்கு...

    துருவிய தேங்காய் - 1/2 கப்
    முந்திரி - 8
    கசகசா - 1/2 டீஸ்பூன்
    சோம்பு - 1 டீஸ்பூன்
    பச்சை மிளகாய் - 2
    இஞ்சி - 1/2 இன்ச்
    பூண்டு - 5

    செய்முறை :

    * வெங்காயம், தக்காளி, பன்னீரை பொடியான துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

    * அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு, தண்ணீர் சிறிது ஊற்றி மென்மையாக அரைத்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.

    * ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பன்னீரை சேர்த்து பொன்னிமாக வதக்கிக் கொள்ளவும்.

    * மற்றொரு அகன்ற வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்த பின் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கி, பின் தக்காளியை சேர்த்து மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.

    * பிறகு அதில் அரைத்து வைத்துள்ள தேங்காய் பேஸ்ட், 1 கப் தண்ணீர், மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா சேர்த்து 15 நிமிடம்,  எண்ணெய் தனியாக பிரியும் வரை நன்கு கொதிக்க விட வேண்டும்.

    * பின்பு க்ரீம் சேர்த்து 2 நிமிடம் கொதிக்க வைத்த பின் பன்னீர் துண்டுகளை சேர்த்து, சிறிது உப்பு தூவி 1 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க வைத்து, கொத்தமல்லி தூவி இறக்கினால், பன்னீர் குருமா ரெடி!!!

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    கேரளாவில் ஓணம் பண்டிகையில் போது செய்யப்படும் பல்வேறு வகையான ரெசிபிக்களில் ஒன்று தான் கேரளா பருப்பு பாயாசம். இதை எப்படி செய்வதென்று பார்ப்போம்.
    தேவையான பொருட்கள் :

    கடலைப்பருப்பு - 1/2 கப்
    நாட்டுச்சர்க்கரை - 1/2 கப்
    தேங்காய் பால் - 1/2 கப்
    பால் - 2 டேபிள் ஸ்பூன்
    முந்திரி - தேவைக்கு
    சுக்கு பொடி - 1 சிட்டிகை
    நெய் - தேவைக்கு

    செய்முறை :

    * நெய்யில் முந்திரியை வறுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

    * நாட்டுச்சர்க்கரையை ஒரு அடிகனமாக பாத்திரத்தில் கொட்டு அதில் தேவையான தண்ணீர் ஊற்றி சர்க்கரை நன்றாக கரையும் வரை சூடேற்றி, பின் அதனை வட்டிகட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

    * மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் கடலைப்பருப்பை சேர்த்து பொன்னிறமாக வறுத்து, குக்கரில் போட்டு, அதில் போதிய அளவில் தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி அடுப்பில் வைத்து, 5 விசில் விட்டு இறக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். (பருப்பு நன்கு மசியும் அளவில் வேக வைக்க வேண்டாம்.)

    * வடிகட்டி வைத்துள்ள வெல்லப் பாகை மீண்டும் அடுப்பில் வைத்து, 2 நிமிடம் சூடேற்றி, அதில் வேக வைத்துள்ள கடலைப் பருப்பு சேர்த்து கரண்டியால் பருப்பை மசித்து விட வேண்டும். பருப்பானது வெல்லப் பாகுவுடன் நன்கு ஒன்று சேர்ந்தவுடன், அதில் தேங்காய் பால் சேர்த்து கொதிக்க விட வேண்டும்.

    * பாயாசம் கொதிக்க ஆரம்பித்ததும், அதில் சுக்கு பொடி, பால் சேர்த்து நன்கு பச்சை வாசனை போக கொதிக்க வைத்து முந்திரியை தூவி இறக்கினால், கேரளா பருப்பு பாயாசம் ரெடி!!!

    * விருப்பப்பட்டால் தேங்காயை சிறு துண்டுகளாக நறுக்கி நெய்யில் வறுத்து அதையும் பாயாசத்தில் சேர்க்கலாம்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள். 
    மாம்பழத்தை வைத்து பாயாசம் செய்து சுவைத்துப் பாருங்கள். சுவையான மாம்பழ பாயாசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பாசுமதி அரிசி - 2 டீஸ்பூன்
    பால் - 2 கப்
    சர்க்கரை - 2 டேபிள் ஸ்பூன்
    மாம்பழ கூழ் - 1/2 கப்
    மாம்பழ துண்டுகள் - கால் கப் (பொடியாக நறுக்கியது)
    குங்குமப்பூ - 1 சிட்டிகை
    கண்டென்ஸ்டு மில்க் - 1 டேபிள் ஸ்பூன்
    நெய் - 1 டீஸ்பூன்
    முந்திரி, பாதாம் - தேவைக்கு
    மாம்பழம் - சிறிது
    ஏலக்காய் - 1 சிட்டிகை

    செய்முறை :

    * பாசுமதி அரிசியை மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ள வேண்டும்.

    * முந்திரியை நெய்யில் வறுத்து வைக்கவும். பாதாமை துருவி வைக்கவும்.

    * 1 டேபிள் ஸ்பூன் வெதுவெதுப்பான பாலில் குங்குமப்பூ சேர்த்து ஊற வைக்கவும்.

    * அடிகனமான ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி, பொடித்த அரிசியை சேர்த்து நன்கு வேக வைக்க வேண்டும்.

    * பின்பு அத்துடன் குங்குமப்பூ பாலையும் ஊற்றி 15 நிமிடம் குறைவான தீயில் வேக வைத்து வைக்கவும். பால் சற்று சுண்ட வேண்டும்.

    * அடுத்து அத்துடன் சர்க்கரை சேர்த்து குறைவான தீயில் 5 நிமிடம் கொதிக்க வைக்கவும்.

    * பிறகு அதில் கண்டென்ஸ்டு மில்க்கை சேர்த்து கிளறி அடுப்பில் இருந்து இறக்கி குளிர வைத்து, மாம்பழக் கூழ் மற்றும் ஏலக்காய் பொடியை சேர்த்து கிளறி, மேலே முந்திரி, பாதாம், நறுக்கி வைத்துள்ள மாம்பழத் துண்டுகளையும் தூவினால், மாம்பழ பாயாசம் ரெடி!!!

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள். 
    கோழிக்கறியை மிதமான காரத்தில் சாப்பிட விரும்புபவர்களுக்கு மிளகு, தேங்காய்ப்பால் சிக்கன் கிரேவி ஏற்றது.
    தேவையான பொருட்கள் :

    சிக்கன் - அரைக்கிலோ
    சின்னவெங்காயம் - 150 கிராம்
    தக்காளி - 2
    மிளகுதூள் - 4 டீஸ்பூன்
    சீரகத்தூள் - 2 டீஸ்பூன்
    வரமிளகாய் - 4
    இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
    மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
    தயிர் - 3 டீஸ்பூன்
    தேங்காய்பால் - ஒரு கப்
    உப்பு - தேவையான அளவு
    கறிவேப்பிலை - ஒரு கொத்து
    கொத்தமல்லித்தழை சிறிதளவு
    எண்ணெய் - 3 டீஸ்பூன்

    செய்முறை :

    * சிக்கனை பொடியாக நறுக்கி சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து கழுவிய பின்னர் அத்துடன் உப்பு, தயிர், சிறிதளவு இஞ்சி பூண்டு சேர்த்து அரைமணிநேரம் ஊறவைக்கவும்.

    * வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும்.

    * அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கறிவேப்பிலை, வெங்காயம் போட்டு வதக்கவும்.

    * வெங்காயம் சற்று வதங்கியதும் அத்துடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

    * இஞ்சி பூண்டு பச்சை வாசனை போனவுடன் தக்காளியை சேர்த்து குழைய வேகவிடவும்.

    * அடுத்து அதில் ஊறவைத்த சிக்கனை சேர்த்து கிளறவும்.

    * இதோடு வரமிளகாயை கிள்ளிப்போடவும். சீரகம், மிளகுத்தூளை சேர்த்து நன்றாக கிளறவும்.

    * சிறிதளவு தண்ணீர் சேர்த்து மூடிபோட்டு வேகவிடவும்.

    * சிக்கன் ஊறவைத்ததால் வேகமாக வெந்துவிடும்.

    * சிக்கன் முக்கால் பாகம் வெந்தவுடன் அத்துடன் தேங்காய்பால் சேர்க்கவும். ஸ்டவ்வை மிதமாக எரியவிடவும்.

    * சிக்கன் கிரேவி பதத்திற்கு வந்த உடன் கொத்தமல்லித் தழை தூவி இறக்கவும்.

    * மிளகு தேங்காய்பால் கிரேவி தயார்.

    * சூடான சாதத்தில் போட்டு சாப்பிடலாம். சப்பாத்திக்கும் தொட்டுக்கொள்ள ஏற்றது. காரம் குறைவாக இருப்பதால் குழந்தைகளும் நன்றாக சாப்பிடுவார்கள்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

    ×