search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    நெய் சோறு
    X
    நெய் சோறு

    சுட சுட மணக்கும் நெய் சோறு செய்யலாம் வாங்க

    தினமும் சாம்பார், காரக்குழம்பு என்று சமைக்காமல் ஒரு நாள் மாறாக நெய் சாதம் செய்து பாருங்கள். உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. சரி வாங்க நெய் சாதம் செய்வது எப்படி குறித்து பார்க்கலாம்..
    தேவையான பொருள்கள்:

    பாசுமதி அரிசி - 2 கப்
    முந்திரி - 10
    சீரகம் - 1 ஸ்பூன்
    கறிவேப்பிலை - சிறிதளவு
    பட்டை -2
    கிராம்பு - 2
    நெய் - 1 கப்
    உப்பு - தேவையான அளவு
    கொத்தமல்லி - சிறிதளவு

    செய்முறை:

    கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பாத்திரத்தில் 2 கப் அரிசி சேர்த்து சாதமாக வடித்து ஒரு பௌலில் சாதத்தை கொட்டி ஆற விட வேண்டும். அப்படி செய்தால் சாதம் உதிரி உதிரியாக கிடைக்கும்.

    அடுப்பில் ஒரு வாணலியை வைத்து அதில் ஒரு கப் நெய் ஊற்றி சூடாக்கி கொள்ளவும்.

    பிறகு அதில் வாசனைக்காக பட்டை, கிராம்பு, சீரகம், முந்திரி, கறிவேப்பிலை ஆகியவை சேர்த்து வறுத்து கொள்ளவும்.

    பொன்னிறமாக வறுத்த பிறகு வடித்த சாதம் மற்றும் தேவையான அளவு உப்பு ஆகியவை சேர்த்து பத்து நிமிடம் கிளற வேண்டும்.

    கடைசியில் கொத்தமல்லி தழையை தூவினால் சுவையான நெய் சோறு தயார்...

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×