search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    கருணைக் கிழங்கு கபாப்
    X
    கருணைக் கிழங்கு கபாப்

    கருணைக் கிழங்கு கபாப்

    குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் கபாப் வகைகளை வீட்டிலேயே தயார் செய்து ருசிக்கலாம். இன்று கருணைக்கிழங்கை வைத்து கபாப் தயார் செய்யும் முறை பற்றி பார்ப்போம்.
    தேவையான பொருட்கள்

    கருணைக்கிழங்கு - கால் கிலோ
    மிளகாய் தூள், மிளகு தூள் - தேவைக்கு
    இஞ்சி, பூண்டு விழுது - சிறிதளவு
    ரொட்டித் தூள் - தேவைக்கு
    தனியா தூள், கரம் மசாலா - சிறிதளவு
    புளி, புதினா தழை - தேவைக்கு
    மைதா, உப்பு - தேவைக்கு

    கருணைக் கிழங்கு கபாப்

    செய்முறை:

    கருணைக்கிழங்கை தோல் நீக்கி நறுக்கவும்.

    புளியை நீரில் ஊற வைத்து அந்த நீரில் கருணைக்கிழங்கை வேக வைத்துக்கொள்ள வேண்டும்.

    வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் இஞ்சி, பூண்டு விழுதை சேர்த்து கிளறிவிடவும்.

    அதனுடன் மிளகாய் தூள், மிளகு தூள், தனியா தூள், கரம் மசாலா, புதினா தழை, உப்பு ஆகியவற்றை சேர்த்து வதக்கி கீழே இறக்கவும்.

    ஆறியவுடன் கருணைக்கிழங்கை அதில் போட்டு பிசையவும்.

    பின்னர் உருண்டைகளாக பிடித்து மைதா மாவிலும், ரொட்டித்தூளிலும் புரட்டியெடுத்து எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்து சுவைக்கலாம்.

    சூப்பரான கருணைக் கிழங்கு கபாப் ரெடி. 

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×