என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
கொண்டைக்கடலை உருளைக்கிழங்கு சப்ஜி
Byமாலை மலர்25 Feb 2020 8:44 AM GMT (Updated: 25 Feb 2020 8:44 AM GMT)
உருளைக்கிழங்குடன் கொண்டைக்கடலையை சேர்த்து செய்யும் உணவிற்கு பெயர் கொண்டைக்கடலை உருளைக்கிழங்கு சப்ஜி. இதை பூரி, சப்பாத்தி போன்ற உணவுகளுக்கு தொட்டு உண்ணலாம்.
தேவையான பொருட்கள்:
உருளைக்கிழங்கு - 2
கொண்டைக்கடலை - 1 கப்
நெய் - 2 ஸ்பூன்
சீரக விதைகள் - 1ஸ்பூன்
மஞ்சள் - சிறிதளவு
எண்ணெய் - தேவையான அளவு
மசித்த தக்காளி - 2
மிளகாய் பொடி - 1 ஸ்பூன்,
தனியா பொடி - 1 ஸ்பூன்,
வெந்தய தூள் - 1 ஸ்பூன்,
கரம் மசாலா தூள் - 1 ஸ்பூன்
செய்முறை :
உருளைக்கிழங்கை வேகவைத்து வெந்ததும் தோல் உரித்து மசித்து கொள்ளவும்.
கொண்டைக்கடலையை வேக வைத்து கொள்ளவும்.
அடுப்பில் வாணலியை வைத்து சூடானதும் எண்ணெய் ஊற்றி சூடானதும் பெருங்காயத்தூள், மற்றும் சீரகம் சேர்த்து தாளித்த பின்னர் தக்காளி சாறை ஊற்றிக் கிளற வேண்டும். சிம்மில் வைத்து ஆறு முதல் ஏழு நிமிடங்கள் வரை வதக்க செய்யலாம்.
தக்காளி நன்றாக வதங்கிய பின்பு மஞ்சள் தூள், தனியா தூள், மிளகாய் தூள் ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்க வேண்டும். உங்களுடைய தேவைக்கு உப்பு சேர்த்து 3 நிமிடம் வரை வதக்க செய்யலாம்.
மேற்சொன்ன மசாலா நன்றாக வெந்ததும் வேக வைத்த கொண்டைக்கடலை, மசித்த உருளைக்கிழங்கை சேர்த்து வதக்க வேண்டும்.
மசாலாவை பொறுத்து தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம்.
மசாலா நன்கு வேகும் பொழுது அதில் கரம் மசாலா மற்றும் கஸ்தூரி மேத்தி சேர்த்து கிளறி இறக்க வேண்டும்.
கொண்டைக்கடலை உருளைக்கிழங்கு சப்ஜி ரெடி!
கொண்டைக்கடலை - 1 கப்
நெய் - 2 ஸ்பூன்
சீரக விதைகள் - 1ஸ்பூன்
மஞ்சள் - சிறிதளவு
எண்ணெய் - தேவையான அளவு
மசித்த தக்காளி - 2
மிளகாய் பொடி - 1 ஸ்பூன்,
தனியா பொடி - 1 ஸ்பூன்,
வெந்தய தூள் - 1 ஸ்பூன்,
கரம் மசாலா தூள் - 1 ஸ்பூன்
பெருங்காய தூள் - தேவையான அளவு
கஸ்தூரி மேத்தி - சிறிதளவு
செய்முறை :
உருளைக்கிழங்கை வேகவைத்து வெந்ததும் தோல் உரித்து மசித்து கொள்ளவும்.
கொண்டைக்கடலையை வேக வைத்து கொள்ளவும்.
அடுப்பில் வாணலியை வைத்து சூடானதும் எண்ணெய் ஊற்றி சூடானதும் பெருங்காயத்தூள், மற்றும் சீரகம் சேர்த்து தாளித்த பின்னர் தக்காளி சாறை ஊற்றிக் கிளற வேண்டும். சிம்மில் வைத்து ஆறு முதல் ஏழு நிமிடங்கள் வரை வதக்க செய்யலாம்.
தக்காளி நன்றாக வதங்கிய பின்பு மஞ்சள் தூள், தனியா தூள், மிளகாய் தூள் ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்க வேண்டும். உங்களுடைய தேவைக்கு உப்பு சேர்த்து 3 நிமிடம் வரை வதக்க செய்யலாம்.
மேற்சொன்ன மசாலா நன்றாக வெந்ததும் வேக வைத்த கொண்டைக்கடலை, மசித்த உருளைக்கிழங்கை சேர்த்து வதக்க வேண்டும்.
மசாலாவை பொறுத்து தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம்.
மசாலா நன்கு வேகும் பொழுது அதில் கரம் மசாலா மற்றும் கஸ்தூரி மேத்தி சேர்த்து கிளறி இறக்க வேண்டும்.
கொண்டைக்கடலை உருளைக்கிழங்கு சப்ஜி ரெடி!
நீங்கள் விரும்பிய பூரி, சப்பாத்தி அல்லது நாண் உடன் மசாலாவை வைத்து உண்ணுங்கள் இது அதீத சுவையாக இருக்கும்.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X