search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    பாம்பே அல்வா
    X
    பாம்பே அல்வா

    நாவில் கரைந்தோடும பாம்பே அல்வா

    பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் விரும்பும் ருசியான பாம்பே அல்வாவை எளிமையான முறையில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    வெள்ளை சோள மாவு - 1 கப்
    சர்க்கரை - 2 கப்
    நெய் - 1/4 கப்
    முந்திரி, பாதாம் நறுக்கியது - 1 மேசைக்கரண்டி
    எலுமிச்சை சாறு. - 1 தேக்கரண்டி
    ஏலக்காய் பொடி - 1 சிட்டிகை
    கேசரி பவுடர் - 1 சிட்டிகை

    பாம்பே அல்வா

    செய்முறை:

    முதலில் சோள மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு, அத்துடன் 2கப் தண்ணீர் ஊற்றி கட்டி இல்லாமல் கரைத்து வைக்கவும்.

    பின்னர் அதில் கேசரி பவுடர் சேர்த்து நன்கு கலந்து தனியாக வைத்துக் கொள்ளவும்.

    பின்பு ஒரு அடிகனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் 1 கப் தண்ணீர் ஊற்றி, சர்க்கரை சேர்த்து, 2 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க விடவும்.

    பின் எலுமிச்சை சாறு சேர்க்கவும். எலுமிச்சை சாறு சர்க்கரை பாகு கெட்டியாகாமல் பார்த்துக் கொள்ளும்.

    சர்க்கரையானது நன்கு கரைந்து, சர்க்கரை பாகு ரெடியானதும், அதில் கலந்து வைத்துள்ள சோள மாவை சேர்த்து குறைந்த தீயில் தொடர்ந்து கிளறி விட வேண்டும். இடையிடையே சிறிது நெய் சேர்த்து கைவிடாமல் கிளறவும்.

    அப்படி கிளறி விடும் போது, ஆங்காங்கு கெட்டியாக ஆரம்பித்து, நெய் கசிந்து அல்வா போன்று வர ஆரம்பிக்கும்.

    அப்போது அதில் நெய் மற்றும் ஏலக்காய் பொடி சேர்த்து நன்கு அல்வா பதம் வரும் வரை கிளறி, பின் அதில் முந்திரியை சேர்த்து கிளறி இறக்கவும்.

    அல்வா பதம் என்பது அல்வாவில் இருந்து நெய் கசிந்து பாத்திரத்தில் ஒட்டாமல் சுருண்டு வரும் போது ஒரு தட்டில் பரப்பி, ஒரு மணிநேரம் கழித்து, பாதாமை தூவி அதனை துண்டுகளாக்கினால் சுவையான பாம்பே அல்வா ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×