என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
சைனீஸ் ஸ்டைல் தக்காளி முட்டை சாதம்
Byமாலை மலர்19 Jun 2019 8:41 AM GMT (Updated: 19 Jun 2019 8:41 AM GMT)
பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு முட்டை சேர்த்து சைனீஸ் ஸ்டைலில் அருமையான தக்காளி முட்டை சாதம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
பாசுமதி அரிசி - 1 கப்
தக்காளி - 1
தக்காளி கெட்சப் - 2 டேபிள் ஸ்பூன்
வெங்காயத்தாள் - சிறிதளவு
முட்டை - 3 (வேக வைத்து துண்டுகளாக்கப்பட்டது)
பூண்டு - 10 பல்
மிளகு தூள் - 1/2 டீஸ்பூன்
சோயா சாஸ் - 2 டேபிள் ஸ்பூன்
வினிகர் - 2 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி - சிறிது உப்பு - தேவையான அளவு
செய்முறை :
பாசுமதி அரிசியை முக்கால் பாகம் உதிரியாக வேக வைத்து கொள்ளவும்.
தக்காளி, வெங்காயத்தாள், பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
முட்டையை வேக வைத்து துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பூண்டு சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.
பின்னர் வெங்காயத்தாள், தக்காளி சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
அடுத்து வேக வைத்த சாதம், உப்பு மற்றும் மிளகு தூள் சேர்த்து நன்கு கிளற வேண்டும்.
பிறகு சிறிது நேரம் கழித்து, அதில் தக்காளி கெட்சப், உப்பு, சோயா சோஸ், வினிகர் மற்றும் மிளகு தூள் போட்டு, கிளறி விட வேண்டும்.
பின் முட்டைத் துண்டுகளை சேர்த்து பிரட்ட வேண்டும்.
பின் அந்த சாதத்தை நன்கு 5 நிமிடம் கிளறி, கடைசியாக கொத்தமல்லி தழை தூவி இறக்க வேண்டும்.
பாசுமதி அரிசி - 1 கப்
தக்காளி - 1
தக்காளி கெட்சப் - 2 டேபிள் ஸ்பூன்
வெங்காயத்தாள் - சிறிதளவு
முட்டை - 3 (வேக வைத்து துண்டுகளாக்கப்பட்டது)
பூண்டு - 10 பல்
மிளகு தூள் - 1/2 டீஸ்பூன்
சோயா சாஸ் - 2 டேபிள் ஸ்பூன்
வினிகர் - 2 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி - சிறிது உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை :
பாசுமதி அரிசியை முக்கால் பாகம் உதிரியாக வேக வைத்து கொள்ளவும்.
தக்காளி, வெங்காயத்தாள், பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
முட்டையை வேக வைத்து துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பூண்டு சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.
பின்னர் வெங்காயத்தாள், தக்காளி சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
அடுத்து வேக வைத்த சாதம், உப்பு மற்றும் மிளகு தூள் சேர்த்து நன்கு கிளற வேண்டும்.
பிறகு சிறிது நேரம் கழித்து, அதில் தக்காளி கெட்சப், உப்பு, சோயா சோஸ், வினிகர் மற்றும் மிளகு தூள் போட்டு, கிளறி விட வேண்டும்.
பின் முட்டைத் துண்டுகளை சேர்த்து பிரட்ட வேண்டும்.
பின் அந்த சாதத்தை நன்கு 5 நிமிடம் கிளறி, கடைசியாக கொத்தமல்லி தழை தூவி இறக்க வேண்டும்.
இப்போது சுவையான தக்காளி முட்டை சாதம் ரெடி!!!
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X